Wednesday, February 23, 2011

Vijay @ Nagapattinam Public Meet






Saturday, January 29, 2011

Surya rejected for 3 Idiots, Vijay walks in




It is becoming a continuous disappointment for Surya as the actor is losing out many projects in hand due to his over stubbornness. The actor has been insisting most of his producers (those without political influences) that the film must be produced in collaboration with his home banner Studio Green Films. Since Vijay was moved out of the project ‘3 Idiots’ remake due to some political pressures, Surya must have thought that anything he says should have to be accepted. It seems that he wanted Shankar to get the film produced with his home banner and the Telugu version by Gemini Productions. Instantly, Surya was removed from the project and is now replaced by Vijay himself. The actor is now busy working in ‘Velayudham’ and will shortly gives dates to the production house.

Vijay undergoes dental treatment !

கூர்ந்து கவனித்தால் விஜய்யின் சிரிப்பில் சின்ன மாற்றத்தைக் கண்டுபிடிக்கலாம். தனது மேல் பல் வரிசை கொஞ்சம் பெரியதாக இருக்கிறது என்பது அவரது நீண்ட நாள் கவலை. சென்னையின் பிரபல பல் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து, பல் வரிசையின் உயரத்தை இரண்டு மில்லி மீட்டர் குறைத்திருக்கிறார். எக்ஸ்ட்ரா எனர்ஜி சிரிப்பு!

Source: Anandha Vikatan Inbox

Vijay in Coffee with Anu Video

காவலன் எங்கள் காதலன் - விஜய் டிவி

Kavalan Engal kadhalan VIJAY TV FULL VIDEO





























நான் உங்கள் காவலன் - ஜெயா டிவி குடியரசு தின பேட்டி

kavalan smashing hit malai malar news

Sunday, January 23, 2011

எதிரி'களுக்கு விஜய் சவால்! - Junior Vikatan

'எதிரி'களுக்கு விஜய் சவால்!

''மதுரையில் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் ரிலீஸானால் நான் புடவை


கட்டிக்கொள்கிறேன்...'' என்று தி.மு.க. தளபதி, மாவீரன் மதுரை முத்து சவால் விட்டார். படம் ரிலீஸ் ஆனது. மாபெரும் வெற்றியும் பெற்றது. முத்துவின் சபதம் தோற்றது. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அவரது விலாசம் தேடி பண்டல் பண்டலாய் புடவைப் பொட்டலங்கள் குவிந்தன! ஆனால், பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் புகழ்பரப்பும் அ.தி.மு.க. தளபதியாக அதே முத்து உலா வந்ததை ஆச்சர்யமாகப் பார்த்து அதிசயித்தது மதுரை. அன்றைய தி.மு.க. ஆட்சி, எம்.ஜி.ஆர். படத்துக்குக் கொடுத்த நெருக்கடியில் கிஞ்சிற்றும் குறையாமல் இன்றைக்கும் விஜய்யின் 'காவலன்’ படத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், போட்டத் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து உலாவந்து விட்டான், 'காவலன்’! கடந்த 13-ம் தேதி இரவு வரை விழிபிதுங்கி நின்ற விஜய் தரப்பு நம்மிடம் கூறியது இனி...


பிரச்னையின் பிதாமகன்!

''முதலில் 'காவலன்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை மட்டும் 5 கோடிக்கு ஐங்கரன் மூவீஸ் கருணா கேட்டார். அப்போதே கொடுத்திருந்தால், இத்தனை வில்லங்கம் வந்திருக்காது. 50 லட்சம் அதிகம் தருவதாகச் சொன்னார் என்பதற்காக சிங்கப்பூர் சரவணனுக்கு அந்த உரிமையைக் கொடுத்தார்கள். இது ஏழரையை வலியத் தேடி மாட்டிக் கொண்ட கதையைப் போல ஆனது. சரவணன் சினிமா தொழிலுக்குப் புதுசு. விஜய் படம் வெளிவரவே கூடாது என்று வரிந்துகட்டிக் கொண்டு பெரிய இடத்து குரூப் குரூரமாகச் செயல்பட்டது. அவர்கள் விரித்த வலையில் சுலபமாகச் சிக்கிக்கொண்டார் சரவணன். ஆகமொத்தம், பிரச்னையின் பிதாமகனே சிங்கப்பூர் சரவணன்தான்!'' என்று விஜய் தரப்பு சொல்ல ஆரம்பித்திருக்கிறது!

ஒன்றுதிரண்ட 9 வழக்குகள்!

பொங்கலுக்கு 'காவலன்’ வெளிவராது என்று எதிர்த் தரப்பினர் உறுதியாக நம்பினர். ஆனால், வெளிவந்தே தீரவேண்டும் என்பதில் வெறியாக இருந்தார், விஜய். அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்க... இதனைப் பார்த்துக் கோபமான எதிர்த்தரப்புதான் பல்வேறு வழக்குகளை பாய்ச்சியதாக விஜய் தரப்பு சந்தேகப்படுகிறது. இரண்டு மூன்று நாட்களுக்குள் எத்தனையோ அதிரடி திருப்பங்கள் நடக்க, கடந்த 11-ம் தேதி அன்று மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் ஒன்பது வழக்குகள் இந்தப்படத்துக்கு எதிராக குவிந்தன. படப் பெட்டி எப்போது வருமென்று தியேட்டர் அதிபர்கள் பி.பி. எகிறும் அளவுக்கு போன் செய்ய...

விநியோ​கஸ்தர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

13-ம் தேதி மாலை, ' 15 கோடி பணம் கட்டவேண்டும்’ என்று உத்தரவு போட்​டது, சென்னை உயர் நீதிமன்றம். கூடவே 'முழுப்பணத்தையும் செட்டில் செய்த பிறகே படப் பெட்டியைத் தரவேண்டும்...’ என்று லேப்புக்கு லெட்டர் கொடுத்தது.

எல்லாம் மேலிடத்து பிரஷர்!

பொதுவாக லேப்புக்கு 10 கோடி தரவேண்டும் என்றால், முதலில் 2 கோடி தருவார்கள். பின்னர் படப் பெட்டி எடுக்க... விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்களிடம் பணம் பெற்றுக் கடனை அடைப்பார்கள். இதுதான் சினிமா நடைமுறை. ஆனால், அரசியல் நெருக்கடி காரணமாக மொத்தமாக செட்டில் செய்யச் சொன்​னார்கள். செங்கல்பட்டைச் சேர்ந்த நெகட்டிவ் ஃபைனான்ஸியர் ஒருவர் முழுப் பணத்தையும் கேட்டு நெருக்கடி கொடுத்தார். 'நல்லா பழகின உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையா... இப்படி பல்டி அடிக்கிறீங்களே, நியாயமா?’ என்று அவரிடம் கேட்டதும், ' எல்லாம் மேலிடத்து பிரஷர்...’ என்று இப்போது ஸாரி சொல்கிறார்.

கொந்தளித்த ரசிகர்கள்!

வழக்கமாக விஜய் படம் வெளிவரும் ஒரு வாரத்துக்கு முன்பே கட்-அவுட், போஸ்டர் என திமிலோகப்​படுத்துவது அவரது ரசிகர்களின் பழக்கம். ரிலீஸ் தேதி குளறுபடியால் பல ஊர்களில் தியேட்டர் அதிபர்கள் போஸ்டரே ஒட்டவில்லை. இதனால், 'விஜய் படம் வெளிவராதோ...?’ என்று நிலைகுலைந்து போனார்கள் விஜய் ரசிகர்கள். அதன் ரியாக்​ஷனாகத் தங்களது கொந்தளிப்பைக் காட்டத் துவங்கினர். திருச்சியில் இருக்கும் ரசிகர்கள் விஜய் படம் வெளிவருவதில் குழப்பம் நீடித்ததைத் தொடர்ந்து, ரகளையில் ஈடுபட்டனர். பஸ் கண்ணா​டிகளை உடைத்தனர். பவானி​யில் இருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் தியேட்​டர் வாசலில் தீக்குளிக்க முயல... பதறிப்போன ரசிகர்கள் பத்திரமாக மீட்டு, படம் பார்க்கும்வரை கூடவே இருந்தனர். திருநெல்வேலியில் இருக்கும் ரசிகர்கள் 25 பேர் 'காவலன்’ ரிலீஸுக்காக மொட்டை போட்டு ஆன்மிக வேண்டுதல் செய்தனர். வேலூரில் காலை 5 மணிக்கே தியேட்டரை முற்றுகையிட்ட ரசிகர்கள், 12 மணிக்கு படப்பெட்டி வந்தபிறகு படம் பார்த்துவிட்டுத்தான் திரும்பினர். இதற்கு முன்புவந்த விஜய்யின் சில படங்கள் சரியாக போகாததால், சோர்ந்து போயிருந்த விஜய் ரசிகர்களைக் 'காவலனி’ன் வருகை துள்ளிக்குதிக்க வைத்தது!

இந்தப் படம் வெளியிட முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக கண்துஞ்சாது தவித்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனை தொடர்புகொண்டபோது, நம்மிடம் மனம்திறந்து பேசினார். ''எங்களை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அறியாமலே எங்களை வளர்க்கிறார்கள் என்று சொன்னார் அறிஞர் அண்ணா. 'பேனரில் உன்முகம் எத்தனை முறை கிழிக்கப்படுகிறதோ, அத்தனை அடி உயரத்துக்கு நீயும், உன் கொள்கையும் உயருகிறது’ என்று சொன்னார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.! 'எதிர்ப்பு இல்லையென்றால் ஒரு இயக்கம் வளராது. நாம் எதிர்ப்பிலே வளர்ந்தவர்கள்...’ என்று அதற்கு விளக்கம் சொன்னார், கலைஞர்.

தி.மு.க-வில் இருந்து தூக்கி எறியப்பட்டதும் அ.தி.மு.க-வைத் தொடங்கி அசுரவேகத்தில் வளர்ந்து, ஆட்சியையும் பிடித்தார், புரட்சித் தலைவர் எம்ஜி.ஆர்.

அமரர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது, சவ ஊர்வல வேனில் ஏற முயன்ற பெண்மணியைக் கீழே தள்ளிவிட்டுப் பிற்காலத்தில் புரட்சித் தலைவியாக உயர்த்தினார்கள் எதிரிகள். கல்யாண மண்டபத்தை இடித்ததன் மூலம் இன்றைக்கு தே.மு.தி.க. கட்சிக்கு மக்கள் செல்வாக்கு மளமளவென்று வளர்ந்தது. தானுண்டு, தன் வேலையுண்டு என்று சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்த என் மகன் விஜய்யை கையைப் பிடித்து இழுத்துவந்து முழுநேர அரசியல்வாதியாக மாற்றப் போகிறார்கள் இவர்கள்! தானாய் வளர்ந்துவரும் 'விஜய் மக்கள் இயக்கம்’ மீது தடிகொண்டு தாக்கி விஸ்வரூபம் எடுக்க வைத்ததற்கு நன்றி! கோடம்பாக்கத்தில் எத்தனையோ படம் ரிலீஸாகிறது! அதில் ஒன்று 'காவலன்’. அது வெளிவரக்கூடாது என்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை? அதுதான் புரியவில்லை! 'காவலன்’ திரையிடுவதற்காக ஒப்புக்கொண்ட தியேட்டர்களில் திடீரென கெடுபிடிகள் செய்து வேறு சில படங்களை வெளியிட்டது ஏன்? எந்த காரணத்தை முன்னிட்டும் 'காவலன்’ ரிலீஸ் ஆகக்கூடாது என்று சிலர் திட்டம் தீட்டியதாகச் சொல்கிறார்களே, அதன் பின்னணி என்ன?

சென்னையில் மட்டுமல்ல.... தமிழ்நாடு முழுக்கப் படத்துக்காக ரசிகர்கள் வைத்த பேனரை எல்லாம் காவல்துறையினரே கழற்றிக்கொண்டு போனதாக எங்களுக்கு செய்தி வந்தது. அவர்களை தூண்டிவிட்ட உந்துசக்தி எது? மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகனுக்கு எதற்கு இத்தனை தடைகள்? தமிழ்நாட்டில் ஒரு தமிழன் வளரக் கூடாதா? தமிழகம் என்ன ஒரு குறிப்பிட்ட மனிதர்களின் மொத்தச் சொத்தா? இங்கே இன்னொரு தமிழன் சிறு வீடுகட்டி வாழக்கூடாதா? தமிழர்கள் என்ன சுதந்திர நாட்டின் அடிமைகளா?

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கலைஞரை ஒரு போராட்டத்துக்காக சிறைப் பிடித்தார். அப்போது கலைஞருக்காக நான்தான் தோள் கொடுத்தேன்.... அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நீதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக நினைத்து 'நீதிக்குத் தண்டனை’ என்ற படத்தையே தயாரித்து, இயக்கினேன்... அது எல்லாம் மறந்துபோய் விட்டதா? அந்தப் படம் வெளியானபோது, எம்.ஜி.ஆர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். அங்கு போகிற என்னிடம் கலைஞர் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது! சபை நாகரிகம் கருதி அதை இப்போது சொல்ல விரும்பவில்லை.!

அதற்குப் பிறகும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாரா​மல் 'சட்டம் ஒரு விளையாட்டு’ எனும் படத்தை எடுத்​தேன். 'இது எங்கள் நீதி’ படம் ரிலீஸானபோது, கலைஞர் முதலமைச்சர்! அப்போது எல்லாம் பாசத்தோடு பழகியிருக்கிறேன். ஒரு படம் எடுத்தவர்கள் எல்லாம் ஆயிரத்தெட்டு சலுகைகளைப் பெறு​கிறார்கள். அவர் கதை, வசனத்தில் மூன்று படம் எடுத்தும் ஒரு உதவிகூட நான் கேட்டது இல்லை... அந்தளவுக்கு தன்மானமுள்ள தமிழனான என் மகனுக்கு இத்தனை நெருக்கடியா? தடைக்கற்களா? கலைஞர் மீது வைத்த பாசத்துக்குக் கிடைத்த தண்டனையா?!

ஒரு திரைப்படக் கலைஞனாக நாங்​கள் மட்டுமில்லை... எங்களைப்​போல் எத்தனை​யோ பேர் பாதிக்கப்பட்​டுள்​ளோம். சினிமா என்கிற சாதனம் கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாகி விட்டது! இந்த வேதனை​யைத் தாங்கிக்கொண்டு மேடைகளில் போலித்தனமாக பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள் பலர்! உண்மைகளை அப்பட்டமாக உடைத்துப் போடுவ​தால் என்மீது கோபப்படலாம். அந்தக் கோபத்​தின் வெளிப்பாடு வன்முறையாகக்​கூட இருக்கலாம்! ஆனால், நான் சாவுக்குப் பயந்தவனல்ல! அப்படி பயந்து இருந்தால்... எம்.ஜி.ஆரை எதிர்த்து கலைஞருக்குக் கைகொடுத்து இருக்கமாட்டேன்!'' என்றார் ஆவேசமாக.

அதே சூட்டோடு, நடிகர் விஜய்யிடமும் பேசினோம். ''14-ம் தேதி வெளியாக வேண்டிய படத்துக்கு ஏகப்​பட்டத் தடைகள் வந்தது. 15-ம் தேதிதான் படப் பெட்​டியே வெளியூர்களுக்குப் போனது. பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை எல்லாம் நான் சென்னைக்கு அழைத்தேன். நஷ்டம் எவ்வளவு என்று கேட்டேன். 3 கோடி என்றார்கள். உடனே அதற்கான செக்கை கொடுத்தேன். 'காவலன்’ படத்தால் எனக்கு இழப்பு 3 கோடி... இது பரவாயில்லை. ஆனால், நினைத்த மாதிரி என் படத்த ரிலீஸ் செய்த திருப்தி இப்போது இருக்கிறது, அதுபோதும் எனக்கு. எனக்கு என்னுடைய ரசிகர்கள்தான் முக்கியம். பொங்கல் தினத்தன்று அவர்கள் ஏமாறக்கூடாது. எப்போதும் என்னை வாழ வைக்கும் அந்த தெய்வங்களை நான் கைவிடமாட்டேன். அவர்களது அன்புதான் இந்தத் தடைகளை உடைத்தது. இந்தப் படை இருக்கும் போது எனக்கு என்ன கவலை?'' ரத்தினச் சுருக்கமாக முடித்தார் விஜய்.

சிறை மீண்ட 'காவலனி’ன் கதையே இப்படி இருக்கிறது என்றால், அடுத்து வரப்போகும் 'வேலாயுதம்’ யாரை கூர் பார்க்கப் போகிறானோ?!

Source : Juniour Vikatan

ராஜா சின்ன ரோஜா மாதிரி-விஜய்யின் லட்சிய பேட்டி!


தனது படங்கள் வெளியாகிற நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பது விஜய்யின் வழக்கம்தான். என்றாலும், அவசரம் அவசரமாக நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்திக்க முன் வந்தார் விஜய். துறைமுகத்திற்குள் நடந்த வேலாயுதம் படப்பிடிப்புக்கே அழைக்கப்பட்டார்கள் நிருபர்கள். எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அழைக்கப்பட்டதால், துறைமுக வாசலிலேயே சுமார் முக்கால் மணி நேரம் நிற்க வைக்கப்பட்டார்கள். காரணம் செக்யூரிடி சம்பிரதாயங்கள். எப்படியோ கெஞ்சி கூத்தாடிதான் அவர்களை உள்ளே அழைத்துப் போனது விஜய் தரப்பு.

"அண்ணே... அரசியல் கேள்விகள் வேணாம்ணே" என்று அன்பாக கேட்டுக் கொண்டார் விஜய். அப்பவும் விடாமல் கேட்டு மடக்கிய நிருபர்களிடம், "இந்த சந்திப்பு காவலன் ரிலீஸ் நேரத்தில் பொறுமையா இருந்த என் ரசிகர்களுக்கு உங்க மூலமா நன்றி சொல்றதுக்குதான். அரசியல் விஷயங்களை இப்போ பேச வேண்டாம்" என்றார் திரும்ப திரும்ப. "வேலாயுதம் படம் பற்றிதான் இப்போ என்னோட முழு சிந்தனையும் இருக்கு. அடுத்து பகலவன் படத்தில் நடிக்கிறேன். முழு கதையையும் கேட்டுட்டேன். திருப்தியா இருக்கு".

"'ராஜா சின்ன ரோஜா' மாதிரி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படம் பண்ணணும். கிராமத்தில் விவசாயிகள் குறைஞ்சுட்டாங்க. விவசாயத்தின் முக்கியத்துவமும் குறைஞ்சுகிட்டே வருது. இந்த மனப்போக்கு மாறணும். இதையும் வெளிப்படுத்துற மாதிரி ஒரு படத்தில் நடிக்கப் போறேன்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்!

http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/jan/210111a.asp

Vijay's Dinakaran Interview

MGR, Rajini and then Vijay: Survey!!

There is more on Vijay's future plans. Yesterday we said that Vijay has selected his next three producers of his films and he is hoping the experienced hands will further help him to retain his reputation that was lost and found.

Vijay who met the media has further talked about the kinds of films he would be doing in the future. Vijay wants to do a film in the line of Rajini's 'Raja Chinna Roja' which will cater entirely to the children audience. He is also interested in doing a radical film that will talk about the dwindling of agriculture and the lives of farmers.

Meanwhile there is an interesting stat out in favour of Vijay. According to a random survey conducted by the students of Statistics Department from the reputed Loyola College has revealed that Vijay's films are box office hits irrespective of their success in first release.

They say after MGR and Rajini, it is only Vijay who has repeat audiences for his films. After the two legends only Vijay films are having re-releases in single screens and over a period his films end up as commercial hits.

Not that all. The survey reveals another fascinating point. Even in video piracy markets, Vijay films fetch huge profits, much more than films of any other actors of today. Even the catastrophic 'Sura' turned over around Rupees 4 crores in the piracy market it says.

http://www.indiaglitz.com/channels/tamil/article/63274.html

கணக்கு தீர்க்க தயாராகும் காவலன்!

"நான் திருப்பதிக்கு போயிருந்தப்போ ஒரு நிமிட நேரம் கூட நின்று தரிசனம் பண்ண முடியல. கவலையோட வெளியில் வந்தப்போ, அதே திருப்பதி நிர்வாகம் சார்பா உள்ளே அழைக்கப்பட்டு பத்து நிமிடம் சாமி முன்னாடி நின்னு மனமுருக பிரார்த்தனை பண்ணுற பாக்கியம் கிடைச்சது. தினமும் ஒரு பக்தரை திடீர்னு தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இப்படி ஒரு வாய்பை ஏற்படுத்தி தர்றது திருப்பதி தேவஸ்தானத்தின் வழக்கம். இந்த திடீர் தரிசனம் எப்படி எனக்கு பரவசத்தை கொடுத்திச்சோ, அதே அளவு பரவசத்தை விஜய் படமான காவலனை வாங்கிய போதும் உணர்ந்தேன்" என்று விஜய்யை வைத்துக் கொண்டே அவரை பெருமாளாக சித்தரித்தார் காவலன் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருந்த ஷக்தி சிதம்பரம்.

ஷக்திக்கு விஜய் பெருமாளாக தெரிந்த மாதிரி, விஜய்யின் கண்களுக்கும் ஷக்தி தெரிந்தார். ஆனால் பெருமாளாக அல்ல, தனது இமேஜையும், ராஜ பாட்டையையும் அடைத்துக் கொண்டு நிற்கிற நந்தியாக!

தமிழ்சினிமா வியாபாரத்தில் பெரும் அனுபவசாலியான விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே தடுமாறுகிற அளவுக்கு சிக்கல் உருவானது எப்படி? கோடம்பாக்கத்தில் சில முக்கியஸ்தர்களிடம் பேசினோம். கிடைத்த தகவல்கள் விஜய்யின் ஆக்ஷன் படங்கள் போலவே செம விறுவிறுப்பு.

காவலன் பட அலுவலகம் இருக்கிற அதே பில்டிங்கில்தான் ஷக்தி சிதம்பரத்தின் அலுவலகமும் இருக்கிறது. காவலன் பட தயாரிப்பாளர் ரொமேஷ்பாபுவை அடிக்கடி சந்திக்கிற போது ஏற்பட்ட பழக்கம், திடீரென்று ஒரு நாள் பத்து கோடி ரூபாயுடன் ரொமேஷை சந்தித்த ஷக்தி சிதம்பரம், காவலன் வெளியீட்டு உரிமையை எனக்கு கொடுங்களேன் என்று கேட்டார். 42 கோடி ரூபாய் விலை பேசினார்கள். பத்து கோடியுடன் இன்னும் ஏழு கோடி பைனான்ஸ் வாங்கி படத்தை கைமாற்றிக் கொண்டார் ஷக்தி சிதம்பரம். எல்லாம் சரியாகதான் போய் கொண்டிருந்தது.

மீதி பணத்தை புரட்டிக் கொடுக்க வேண்டுமே? அங்கங்கே படத்தை விலைபேசி அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்தார் ஷக்தி சிதம்பரம். இந்த பதினேழு கோடி போக மேலும் அவர் வசூலித்த தொகையான ஒன்பது கோடிகளை தன் பழைய கடன்களை அடைக்க பயன்படுத்திக் கொண்டாராம் அவர்.

ரிலீஸ் நேரத்தில் காவலன் ஏரியாவுக்காக பணம் கொடுத்தவர்கள், நெகட்டிவ் ரைட்சுக்காக பணம் கொடுத்தவர்கள், வட்டிக்கு கொடுத்தவர்கள் என்று ஆளாளுக்கு சூழ்ந்து கொண்டு அனல் கிளப்ப ஆரம்பித்தார்கள். நீதிமன்றம் போனது ஒரு கூட்டம். நிஜத்தில் ஷக்தி சிதம்பரத்தை வளைத்துக் கொண்டு தாக்கியது இன்னொரு கூட்டம். இது போதாதா... காவலன் பொங்கலுக்கு திரைக்கு வராது என்ற தகவலும் சேனலில் வருகிற பிளாஷ் நியூஸ் வேகத்தில் பரப்பப்பட்டது. அப்புறம் நடந்ததெல்லாம் ரத்தம் உறைய வைக்கும் பயங்கரங்கள் என்றார்கள் காவலன் விஷயத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட சினிமாவுலக முக்கியஸ்தர்கள்.

அதை அவர்கள் விவரிப்பதற்கு முன் நமக்கு கிடைத்த வேறு சில தகவல்கள் அதி முக்கியமானது. காவலன் பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய படமே அல்ல. கடந்த மாதமே வந்திருக்க வேண்டும். மன்மதன் அம்பு ரிலீஸ் நேரத்தில் காவலன் வெளி வந்துவிடக் கூடாது என்று நினைத்தவர்கள் அந்த நேரத்தில் முட்டுக்கட்டை போட்டார்களாம்.

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தையும் கடந்த மாதமே ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று நினைத்ததாம் சன் பிக்சர்ஸ். அவர்களிடம் நேரடியாக பேசி தன் மருமகன் படத்தை தள்ளிப் போட வைத்தாராம் ரஜினி. ஏன்? எந்திரன் வெளிவந்து 49 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அந்த விளம்பரங்களை நிறுத்திவிட்டு ஆடுகளம் விளம்பரங்களை ஆரம்பிக்க வேண்டுமா? கொஞ்சம் யோசிங்களேன் என்றாராம். அதன் காரணமாக அவர்களும் ரிலீசை தள்ளிப் போட, ஆடுகளத்திற்கும் காவலனுக்கும் நேரடி முட்டல் ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.

இந்த நேரம் பார்த்துதான் கலைஞரின் கதை வசனத்தில் பா.விஜய் நடிக்கும் இளைஞன் படமும் கோதாவில் குதித்தது. கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை விநியோகஸ்தர்கள் துணையில்லாமல் நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அநாதையாக நிற்கும் பருவக்குமரியை ஹைஜாக் பண்ண துடிக்கும் முரட்டு வில்லன்கள் போல தியேட்டர்களை கைப்பற்றுவதில் படு பயங்கர யுத்தம் துவங்கியது. மற்ற தயாரிப்பாளர்கள் ஸ்டிராங்காக இருக்க, படு வீக்காக இருந்தவர் ஷக்தி சிதம்பரமும், ரொமேஷ் பாபுவும்தான்.

மதுரை ஏரியாவை வாங்கியிருந்தார் பிரபல விநியோகஸ்தரும் பைனான்சியருமான அன்புச் செழியன். என்எஸ்சி ஏரியாவை வாங்கியிருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். டி.கே.ஏரியாவை வாங்கியிருந்தார் மைக்கேல் ராயப்பன். பஞ்சாயத்தில் இவர்கள் இறங்கியதும்தான் படம் வெளிவரும் என்ற நம்பிக்கையே வந்தது தியேட்டர் வட்டாரத்தில். ஆனால் இவர்களையும் தாண்டி வேறு வேறு வகையில் லேப் நிர்வாகத்தை மிரட்ட ஆரம்பித்தார்களாம் சிலர்.

படப்பெட்டி வெளியேறுகிற அந்த இரவு ரொம்பவே டென்ஷனாக கழிந்தது என்றார்கள் இந்த விவகாரத்தை அருகில் இருந்து கண்காணித்த சிலர் நம்மிடம். லேப்புக்கு பதினைந்து கோடியை கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். படம் வாங்குவதற்காக பேசிய தொகையைவிட அதிகம் கொடுத்தால்தான் காவலன் வெளியே வரும் என்ற நிலையில், மூன்று தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதற்காக முன்பணம் கொடுத்திருந்த திமுக எம்.எல்.ஏவான வி.எஸ் பாபு திடீரென்று தன் பரிவாரங்களுடன் லேப்புக்கு வந்தார். தான் கொடுத்திருந்த முன் பணமான இரண்டரை கோடியை திருப்பிக் கொடு என்றார். ஏற்கனவே தட்டுப்பாடு. இதில் பணத்தை திருப்பிக் கேட்டால் என்ன செய்வது? (கடைசி நேரத்தில் விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் ஒரு கோடி ரூபாயும், மைக்கேல் ராயப்பன் சில கோடிகளும் போட்டு சென்னை நகர விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார்கள்) இவரைப் போலவே படம் வெளியே வராது என்ற தகவலால் மற்ற விநியோகஸ்தர்களும் தாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி தரச்சொல்லி மல்லு கட்ட ஆரம்பித்தார்கள்.

எப்படி எப்படியோ சமாளித்து கடைசியாக எஸ்.ஏ.சந்திரசேகர் மூன்று கோடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து படப்பெட்டி வெளியே வந்துவிடும் என்ற நிலை. இதை பேசி முடிக்கிறபோது நள்ளிரவை தாண்டி அதிகாலை ஆரம்பித்திருந்தது. எஸ்.ஏ.சி எத்தனை கோடிக்கு செக் கொடுத்தாலும் அதை நம்பலாம் என்று கூறிய லேப் நிர்வாகம், அடுத்த அரை மணி நேரத்திலேயே "செக் வேண்டாம். பணமாக கொடுங்கள்" என்று செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டதாம். அந்த விடியற்காலை நேரத்தில் எங்கு போய் பணம் புரட்டுவது? பணம் புரட்ட போனவர்கள் திரும்பி வர காலை ஒன்பது மணி ஆகிவிட்டது.

இந்த சில மணித்துளி தாமதங்களை கூட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் சிலர். மீண்டும் படம் வெளிவராது என்ற தகவல் எஸ்எம்எஸ் மூலம் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது. காவலன் வராது என்ற பொய் தகவலை பரப்பிய அவர்கள், என்ன நினைத்து பரப்பினார்களோ. அதுதான் நடந்தது. காவலன் வரவேண்டிய பல தியேட்டர்களில் வேறு படம் வந்தது.

இதற்கிடையில் படப்பெட்டியும் வெளியே வந்தது. மதுரை ஏரியாவை வாங்கியிருந்த அன்புச்செழியன் சென்னையிலிருந்து விமானத்தில் பெட்டியை ஏற்றி அனுப்பியதுடன், சுற்று வட்டார தியேட்டர்காரர்களை காருடன் விமான நிலையத்திற்கே வந்து காத்திருக்க சொன்னாராம். இந்த முன் ஜாக்கிரதையையும் மீறி டிஜிட்டல் தியேட்டர்களுக்கு சாட்டிலைட் மூலம் திரையிடப்படும் முறையிலும் ஏக குளறுபடி ஏற்படுத்த முயன்றார்கள் சிலர்.

யுஎப்ஓ என்ற நிறுவனத்தின் மூலம்தான் இந்த வசதி அளிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இதில் பங்குதாரராக இருந்தவர் இளைஞன் பட தயாரிப்பாளர் மார்ட்டின். இந்த அலுவலக ஊழியர்கள்தான் ஒவ்வொரு தியேட்டருக்கும் சென்று பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி படத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த என்ஜினியர்களும் வேண்டுமென்றே தாமதமாக அனுப்பப்பட்டதால் தென் மாவட்டங்களில் பல தியேட்டர்களில் ஒரு ஷோ போடுகிற நேரமே கட் ஆனதாகவும் குமுறுகிறார்கள் விஜய் தரப்பில்.

இதற்கிடையில் காவலன் ஓடுகிற தியேட்டர்களில் அப்படத்தை து£க்கிவிட்டு இளைஞன் படத்தை திரையிட சொல்லி சிலர் பிரஷர் செய்வதாக ஒரு தகவல் கசிகிறது. இது உண்மையா என்ற கேள்வியுடன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் திருச்சி ஸ்ரீதரை தொடர்பு கொண்டோம்

அப்படி நடப்பதாக எங்கள் காதுக்கு எந்த தகவலும் வரலை என்றவர் தொடர்ந்து சில Kavalanவிஷயங்களை பகிர்ந்து கொண்டார். ரஜினிக்கு பிறகு கலெக்ஷன் ஹீரோ என்றால் அவர் விஜய்தான். காவலன் படம் வெளிவருவதில் ஏற்பட்ட குழப்பம் முழுக்க முழுக்க பணப் பிரச்சனைதான். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காவலன் படத்தை எடுத்துவிட்டு இளைஞன் படத்தை திரையிடும்படி யாரையும் யாரும் வற்புறுத்தியதாகவும் சொல்ல முடியாது. கோவையில் இருக்கிற ராயல் தியேட்டரில் இளைஞன் படத்தை திரையிட்டிருந்தார்கள். அது ஏசி இல்லாத தியேட்டர். தலைவர் படத்தை ஏ.சி தியேட்டர்ல ரிலீஸ் செய்ங்க என்று அமைச்சர் பொங்கலு£ர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். அதையடுத்து அருகில் இருந்த கே.ஜி.காம்பளக்சுக்கு இளைஞன் மாற்றப்பட்டது. இளைஞன் விஷயத்தில் இது ஒன்றுதான் நடந்தது என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

திரையுலக முக்கியஸ்தர்களில் திமுக அபிமானிகள் சிலரிடம் விசாரித்தோம்.

திரையுலகத்தில் ஷக்தி சிதம்பரத்தின் நிலைமை என்ன என்று தெரிந்தே அவரிடம் படத்தை விற்றதுதான் காவலன் குழப்பத்திற்கு மொத்த காரணம். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு பிரச்சனையை அரசியலாக்கி ஆளும் கட்சி மீது பழியை போட்டு சுய லாபம் தேட முயல்கிறார் எஸ்.ஏ.சி என்றார்கள் ஆவேசமாக.

இத்தனை விஷயங்கள் இப்பட விவகாரத்தின் பின்னணியில் இருந்தாலும் கொஞ்சம் சிரத்தையோடு கவனித்தால் விஜய்யை அவரது இமேஜை டேமேஜ் செய்ய அரசியல் பலம் கொண்ட சிலர் ரொம்பவே மெனக்கெட்டிருப்பது புரியும். விஜய்க்கும் இது தெரியும். அதனால்தான் அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள தனது ரசிகர் மன்ற மாநாட்டில் இதற்கெல்லாம் பதிலடி தர நினைக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

அம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக விஜயகாந்த்தை அழைத்து பேச வைத்து தனக்கு குடைச்சல் கொடுத்த ஆளும் தரப்பு ஆதரவாளர்களை ஒரு கை பார்க்கவும் தயாராகிறாராம் விஜய்.

நன்றி - தமிழக அரசியல் வார இதழ்

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குரல்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். முத்துக்கண்ணன், செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,


’’நடிகர் விஜய் நடித்து, சக்தி சிதம்பரத்தின் சினிமா பேரடைஸ் நிறுவனம் சார்பில், ரோமேஸ்பாபு தயாரித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள காவலன் திரைப்படத்திற்கு தமிழகமெங்கும் தடைகளை ஏற்படுத்தும் திமுக அரசுக்கு டி.ஒய்.எப்.ஐ கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.


பல ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் உள்ள பல பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் கூட இன்று தாங்கள் தயாரிக்கும் படத்தை கலைஞர் குடும்பத்திற்கு விற்றால்தான் வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளும் கலைஞர் குடும்பத்தாரிடமே உள்ளதால், இவர்களை பகைத்து கொள்ள இயலாத பல தயாரிப்பு நிறுவனங்கள் இன்று திரையுலகை விட்டே வெளியேறி விட்டனர்.

ஆதிக்கம் செலுத்தும் மூன்று தயாரிப்பாளர்களும் முதல்வரின் பேரன்கள்.

ஒரு பேரன் துணை முதல்வரின் மகன், மற்றொரு பேரன் மத்திய அமைச்சரின் மகன், இன்னொரு பேரனும் மத்திய அமைச்சரின் சகோதரராக உள்ளதால், ஆட்சி அதிகாரம் முழுவதையும் திரைத்துறையில் தங்களுக்கு அடிபணியாதவர்களை பழிவாங்கவே பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் திரையுலகின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு பல தடைகளை ஏற்படுத்தியவர்கள், பொங்கலுக்கு படம் வெளிவந்த பின்பு திரையரங்குகளில் நேரடியாக ரசிகர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவது அன்றாடச் செய்தியாக பத்திரிகையில் வருகின்றன.

பல நகரங்களில் டி.ஒய்.எப்.ஐ தோழர்கள் நேரடியாக சென்று நியாயம் கேட்கையில் அல்லது போராட்டம் நடத்துகையில் மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. காட்சிகளை ரத்து செய்வது, போஸ்டர், பேனர்களை கிழிப்பது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பவையெல்லாம் பாசிச அடக்குமுறைகளை நினைவுபடுத்துகின்றன.


ஏற்கனவே பல தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் திரைமறைவில் பாதிக்கப்பட்ட நிலைமாறி இன்று நடிகர் விஜய் நேரடியாகவே மிரட்டப்பட்டுள்ளார். இந்நிலை தொடருமோ என அச்சம் திரையுலகில் பரவிவருகிறது.

தமிழக முதல்வர் குடும்பத்தின் ஏகபோக திரைத்துறை ஆதிக்கத்திலிருந்து தமிழ் திரையுலகின் படைப்பு சுதந்திரத்தையும், தொழில் சுதந்திரத்தையும் மீட்டெடுக்க குரல் எழுப்ப வேண்டுமென தமிழக மக்களையும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்து அழைக்கிறது’’என்று தெரிவித்துள்ளனர்.

source

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47180

WHEN REAL IMITATES REEL -TOI

WHEN REAL IMITATES REEL -TOI
Often incidents in reel life are imitations of those that have happened in real life. But the reverse too can happen on occasions. Don’t think so? Then, it’s time you read this.
Two lovers, who have been in constant touch with each other only over the phone, decided to meet each other in person after watching Vijay's latest film, in which a similar situation is portrayed.
The two — Manisekaran from Trichy and Vasantha from Pudukottai — have now decided to get married after their meeting.
The couple, it seems, has invited Vijay to preside over their wedding.
Sources claim that Vijay too is very inclined to do so.


SOURCE- TIMES OF INDIA

STOP Kavalan PIRACY


Vijay-Asin starrer Kaavalan has been receiving stupendous response, world over.. With extraordinary visuals and foot- tapping songs combined with gripping story line and great performance by the actors, the film is driving the audience crazy everywhere..

As piracy is one of the main disadvantage of any new release, it should be stopped with a bang.. Great efforts are being taken to stop this unlawful activity everywhere.

With regards to this piracy issue, 3 people have been arrested in UK, Canada and Paris, while they were recording the film at the cinemas. if anyone found doing such an illegal act, will be punished severely..

Kind Attention viewers:
If you come across any person recording the film in the cinemas or releasing pirated movie at your local shops in UK please call crime stopper 0800 555 111 begin_of_the_skype_highlighting 0800 555 111 end_of_the_skype_highlighting. For illegal sites showing contents of the film, the sites can be reported thorough our worldwide E-mail antipiracy@ayngaran.com

Please note that your identity need not be revealed by you.. The grandeur of the film can be enjoyed only in theatres, so watch the film in cinemas, thereby STOP KAAVALAN PIRACY!!!

Source: http://www.ayngaran.com/frame.php?iframepath=home.php

வெற்றியில் விஜய்! அடுத்த பிளான்...

காவலன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஆகிட்டான் என்று கும்மிக்கொட்டி வருகிறது விஜய் ரசிகர் வட்டாரம். கொஞ்ச காலமாக கடுப்பில் இருந்த விஜய் காவலன் வெற்றியில் குஷியாகி இருக்கிறார். காவலன் படம் பல சிக்கல்களால் தாமதமாகியது. தாமதமான போதும் தன் படத்திற்காக பொறுமையோடு காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார் விஜய்.

அரசியலைப் பற்றி ஏதாவது கேட்டால், "ண்ணா... அரசியல் கேள்விகள் வேணாம் ண்ணா"என்று சொல்லும் விஜய் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங்கில் படு பிசியாக இருந்து வருகிறார். வேலாயுதம் ஷூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்து வருகிறது. விஜய்யின் முழு சிந்தனையும் இப்போது வேலாயுதம் படத்தில் தானாம். வேலாயுதம் படத்தை விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். (அப்போ விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு பொங்கல் இருக்கு டோய்... கலக்குங்ண்ணா )

காவலன் வெற்றி பெற்றுள்ளதால், மீண்டும் தயாரிப்பாளர்கள் விஜய்யின் வாசலில் வரிசைக் கட்டுகிறார்கள். அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில் நடிக்கிறார் விஜய். பகலவன் படத்தின் முழு கதையும் கேட்டதால் விஜய்க்கு ரொம்ப திருப்தி.


'ராஜா சின்ன ரோஜா' மாதிரி முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் ஆசையாம். ( என்னப்பா இதுவரைக்கும் கர்சிப்பையே கத்தியா யூஸ் பண்ணவரு... திடீர்ன்னு இப்படி குழந்தை மனசுக்காரரா ஆகிட்டாரு )

இயக்குனர் சேரன் கதை சொன்ன போதெல்லாம் அந்த படங்களை ஏதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்தார் விஜய். ஆனால் இப்போதோ கிராமத்தில் விவசாயிகள் குறைந்துவிட்டார்கள். விவசாயத்தின் முக்கியத்துவமும் குறைந்துவிட்டது. இந்த மனப்போக்கு மாற வேண்டும். இதையும் வெளிப்படுத்துகிற மாதிரி ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார் விஜய். ( இது புதுசாவுல இருக்கு )

அடுத்தடுத்து படங்களை யோசிப்பதற்கு விஜய்க்கு ஒரு ஹெல்தி டானிக் மாதிரி அமைந்து இருக்கிறது காவலன் கொடுத்த வெற்றி!

Thursday, January 20, 2011

Vijay Special -விஜயதசமி " @ Radio Hello FM - 106.4 on 20-01-2011



அன்புள்ள விஜய் ரசிகர்கள்

அன்புடன் வேணு

Download Vijay Kaavalan Special Program on Hello FM recording from 6 am to 12 pm noon

i will upload full day program tomorrow

Please post your comments in the comment section

Hello FM (6 am to 12 pm noon) download link

http://www.mediafire.com/?3ra97elp1nzv1me

Full Day Vijay kaavalan Special Program of Hello FM

you can download from the following links don't forget to post your comments

http://www.mediafire.com/?3n5a2g5omsi2x55

http://www.mediafire.com/?5vbgd0cd53ok3ro

Edited programs of Vijay kaavalan Special Hello FM download link

http://www.mediafire.com/?nls00zu2usef5fr

thanks,
Venuram

Monday, January 17, 2011

BANNERS in Theater - Pictures & Videos





How to Stop Kaavalan Piracy?

How to Stop Kaavalan Piracy?

Guys, if you found any download movie link for Kavalan, copy the url and send a mail to reportingonlinepiracy@gmail.com

It will get deleted in sometime then.
Please help and support good movie Kaavalan
by reporting

தயவு செய்து நல்ல படமான காவலனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி திரையரங்கில் காவலன் படம் பார்க்க சொல்லவும்

Thnx
Venu

Popular Posts