Sunday, January 23, 2011

வெற்றியில் விஜய்! அடுத்த பிளான்...

காவலன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஆகிட்டான் என்று கும்மிக்கொட்டி வருகிறது விஜய் ரசிகர் வட்டாரம். கொஞ்ச காலமாக கடுப்பில் இருந்த விஜய் காவலன் வெற்றியில் குஷியாகி இருக்கிறார். காவலன் படம் பல சிக்கல்களால் தாமதமாகியது. தாமதமான போதும் தன் படத்திற்காக பொறுமையோடு காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார் விஜய்.

அரசியலைப் பற்றி ஏதாவது கேட்டால், "ண்ணா... அரசியல் கேள்விகள் வேணாம் ண்ணா"என்று சொல்லும் விஜய் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங்கில் படு பிசியாக இருந்து வருகிறார். வேலாயுதம் ஷூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்து வருகிறது. விஜய்யின் முழு சிந்தனையும் இப்போது வேலாயுதம் படத்தில் தானாம். வேலாயுதம் படத்தை விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். (அப்போ விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு பொங்கல் இருக்கு டோய்... கலக்குங்ண்ணா )

காவலன் வெற்றி பெற்றுள்ளதால், மீண்டும் தயாரிப்பாளர்கள் விஜய்யின் வாசலில் வரிசைக் கட்டுகிறார்கள். அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில் நடிக்கிறார் விஜய். பகலவன் படத்தின் முழு கதையும் கேட்டதால் விஜய்க்கு ரொம்ப திருப்தி.


'ராஜா சின்ன ரோஜா' மாதிரி முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் ஆசையாம். ( என்னப்பா இதுவரைக்கும் கர்சிப்பையே கத்தியா யூஸ் பண்ணவரு... திடீர்ன்னு இப்படி குழந்தை மனசுக்காரரா ஆகிட்டாரு )

இயக்குனர் சேரன் கதை சொன்ன போதெல்லாம் அந்த படங்களை ஏதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்தார் விஜய். ஆனால் இப்போதோ கிராமத்தில் விவசாயிகள் குறைந்துவிட்டார்கள். விவசாயத்தின் முக்கியத்துவமும் குறைந்துவிட்டது. இந்த மனப்போக்கு மாற வேண்டும். இதையும் வெளிப்படுத்துகிற மாதிரி ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார் விஜய். ( இது புதுசாவுல இருக்கு )

அடுத்தடுத்து படங்களை யோசிப்பதற்கு விஜய்க்கு ஒரு ஹெல்தி டானிக் மாதிரி அமைந்து இருக்கிறது காவலன் கொடுத்த வெற்றி!

No comments:

Post a Comment

Popular Posts