Friday, June 26, 2015

Wednesday, June 24, 2015

10 Reasons Why Ilayathalapathy Vijay Could Be The Next Superstar

10 Reasons Why Ilayathalapathy Vijay Could Be The Next Superstar

Who could be Rajinikanth's successor is still left open for discussion and there are two men leading the race, Thala Ajith and Ilayathalapathy Vijay.
Now, let’s take a look at the top 10 reasons why Ilayathalapathy Vijay could be the next Superstar.
 


1. Good Screen Presence 
There is a reason why Vijay is called a 'mass hero'. The moment he appears on screen, he demands a huge applause from his fans and movie lovers alike. His screen presence is definitely larger than life, an important attribute indeed to become a Superstar.

2. Clean Off-Screen Image 
To become a Superstar, a clean off-screen image is of vital importance. Vijay is one such hero who often distance himself from unwanted controversies. But at the same time, he also makes sure to voice out his opinion if and when required, showcasing the skills of a good leader.

3. Massive Fan Following 
This is one of the main reasons if not the reason why Vijay could go on to become the next Superstar. After Rajinikanth, it is arguably Vijay who has the highest number of fans in South India. 

4. Social Welfare Organisations 
There are many social welfare organisations set up in the name of Vijay across Tamil Nadu. The most prominent of them all is 'Vijay Makkal Iyakkam' which was launched by the actor himself in 2009. He also extends his support for those in need as mentioned earlier.

5. High Percentage Of Hit Rate 
There is a reason why Rajinikanth went on to become a Superstar surpassing Kamal Haasan and it is the high percentage of hit rate the actor boasts of. Likewise, Vijay has a phenomenal success rate right throughout his career.

6. Multi Talented Personality 
Vijay is loved by many largely because he is a multi talented personality. Apart from scoring vital points with his acting skills, he can create a huge impact with his singing abilities. But his main weapon is his dance moves. Vijay has been and still is one of the most impressive dancers Kollywood has ever produced.

7. Frequent Interaction With Fans 
Vijay is one actor who often uses social media platforms such as Twitter to stay connected with his fans. His efforts to understand his fans better is praiseworthy, for at the end of the day, all celebrities put in so much of efforts to make their fans and audience happy.

8. A Phenomenon Called Vijay 
Over the last few years Vijay is heading in the right direction to become a phenomenon worldwide.

9. Favourite Among Other Celebrities 
Vijay has always made his presence felt at almost all important Kollywood and South Indian Film fraternity gatherings. His indulgence in such important functions have made him a favourite among other celebrities. 

10. Shares Many Similarities With The Current Superstar 
The last but one of the most important reason is Vijay does share a lot of similarities with Superstar Rajinikanth. Be it the way he carries himself, his selection of scripts and the way he values his fans, Vijay is the closest celebrity in Kollywood to have qualities similar to that of Rajinikanth.


Cover Image & Source: Filmibeat

Monday, June 22, 2015

விநியோகஸ்தர்களின் வசீகரன் விஜய்!


இன்று - ஜூன் 22 - நடிகர் விஜய்யின் பிறந்தநாள்

 

செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு முதலான படங்கள் வெளியானபோது, சினிமா விமர்சகர்கள் மட்டுமல்ல... ஜோதிடர்களாலும் கணித்திருக்க முடியாது, நடிகர் விஜய்யின் எதிர்காலத்தை!

தனது தந்தையின் உறுதுணையுடன் சினிமாவுக்கு வந்த விஜய்யின் ஹிஸ்டரி உங்களில் பலருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த முகவரியைக் கொண்டு, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கெமிஸ்ட்ரியை மாற்றிக்கொள்ள அவர் பட்ட மெனக்கெடல்கள் அனைத்தும் அவருக்கு நெருக்கமான மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.

சினிமாவை உன்னதமான கலையாகக் கருதி, திரைப்படங்களைச் செதுக்கும் கலைஞர்கள் மட்டுமல்ல... மூன்று மணி நேரம் தனிமனித துயரம் மறந்து நடிப்பு, நடனம், நகைச்சுவை, ஆவேசம், ஆரவாரம் மூலமாக மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. இதில், நடிகர் விஜய் இரண்டாவது ரகம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

'காக்கா முட்டை'கள் மூலம் கலைத் திறன் ரீதியாக காலரைத் தூக்கிக்கொள்வது ஒரு வகை என்றால், இந்திய அளவில் தமிழ் சினிமா மீது கவனம் படர வழிவகுப்பதற்கு தொடர்ச்சியான வர்த்தக வெற்றிகளும் தேவை என்பது கோடம்பாக்கம் அறிந்த ஒன்றுதான். அப்படி, தமிழ் சினிமாவுக்கு தன்னாலான பங்களிப்பைத் தந்து வருபவர் நடிகர் விஜய்.
ஒரு படத்தின் வெற்றி என்பது, அப்படத்தின் பங்குவகித்த நடிகர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உறுதுணைத் தொழிலாளர்கள் தொடங்கி தயாரிப்பாளர் வரை அனைவருக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால், படம் வெளியான மறுநொடியே ஆன்லைனிலும், திருட்டு டிவிடி வடிவிலும் சினிமா வர்த்தகத்துக்கு உலை வைக்கும் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படும் விநியோகஸ்தர்களின் நிலையை ஒரு சாதாரண ரசிகரால் புரிந்துகொள்வது கடினம்.
அவ்வாறு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் தற்போதைய சூழலிலும், அந்த விநியோகஸ்தர்களுக்கும் வசீகரானாகத் திகழும் திரைக்கலைஞர்களின் விஜய் முக்கிய இடத்தை வகிப்பது கவனிக்கத்தக்க அம்சம்.

விநியோகஸ்தர்களின் வசீகரன்!

ரஜினி - கமல் காலக்கட்டத்துக்குப் பிறகு, நாயகனை முன்னிறுத்தி வரும் வர்த்தகப் படங்களுக்கு முதலில் அச்சாரம் போட்டவர் விஜய். அவர் நடித்த 'திருமலை' படம்தான் முதன்முதலில் நாயகனை முன்னிருத்தி வந்த கமர்ஷியல் படம். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கில்லி', 'சிவகாசி', 'திருப்பாச்சி', 'துப்பாக்கி', 'கத்தி' என தொடர் வெற்றிகள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகன் என்ற இடத்தை பிடித்தவர் விஜய்.
'விஸ்வரூபம்' விவகாரம் முதல் இன்னும் முற்றுபெறாத 'லிங்கா' சிக்கல்கள் வரையிலான காலக்கட்டத்தில் விநியோகஸ்தர்கள் பலரிடம் பேசினேன். அப்போது, நான் கேட்காமலேயே நடிகர் விஜய் பற்றி அவர்கள் கூறிய தகவல்கள்தான் இந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம்.
"தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என மூவர் தரப்புக்கும் லாபம் தரும் படங்கள் என்றால், நிச்சயம் அவை விஜய் படங்கள்தான். ஏனென்றால், மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாம் அதிகபட்சம் 10 நாட்கள்தான். அதற்குப் பிறகு கூட்டம் குறைய ஆரம்பிக்கும். ஆனால், விஜய் படங்கள் பி மற்றும் சி சென்டர்களில் 40 நாட்கள் வரை எங்களுக்கு வசூல் தருகிறது.

அந்த 40 நாட்கள் வரும் கூட்டத்தால் திரையரங்கு கேன்டீன் வியாபாரம், விநியோகஸ்தருக்கு வரும் பணம், அதன் மூலமாக தயாரிப்பாளருக்கு வரும் பணம் என கணக்கிட்டால் எங்களின் நம்பிக்கை நாயகன் விஜய் மட்டுமே. அனைவருமே 'சுறா'தான் விஜய் நடித்ததில் மோசமான படம் என்றார்கள். அப்படம் எனக்கு லாபம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா" என்று என்னிடம் பதில் இல்லாத கேள்வி ஒன்றை கேட்டு வியக்கவைத்தார் ஒரு விநியோகஸ்தர். இது ஒரு சாம்பிள் மட்டுமே.
விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. விஜய் படங்கள் அனைத்துமே குறைந்தபட்சம் 40 நாட்கள் ஓடுகின்றன. மற்ற படங்கள் மூலம் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளைக்கூட விஜய் படங்கள் மூலம் அவர்கள் ஈடுகட்டிக்கொள்கிறார்கள். இதை யார் சொன்னது என்று கேட்கிறீர்களா? தேவாக்களே சொன்னார்கள்.

அரசியல் களம் காணும் விஜய்

சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில்கூட அரசியலில் நிலவும் மாற்றங்களில் எப்போதுமே உன்னிப்பாக கவனிப்பார் விஜய். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி என அனைவரிடமும் நெருக்கம் காட்ட விரும்புபவர் விஜய்.
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, "நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதேமக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் விஜய். விரைவில் அரசியலில் களம் காணுவதற்கு சரியான நேரத்திற்காக விஜய் மட்டுமல்ல... அவரது ரசிகர்களும் 'வெயிட்டிங்'!

ஆவேசமும் அமைதியும்!

சரியான பின்புலம் இல்லாமல் சினிமாவில் சிறப்பிடம் பெறுவது என்பது மிகப் பெரிய சாதனை. அதற்கு இணையானதுதான், பின்புலத்தின் துணையுடன் சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும், சினிமாவில் உச்சத்தைத் தொட்டு, அதை உறுதியுடன் தாங்கிக்கொண்டிருப்பதும் என்பது விஜய் கடந்து வந்த பாதை மூலம் அறியலாம்.
தமிழ் சினிமாவுக்கு பின்புலம் மட்டுமே முக்கியம் என்றால், இன்றைய சூழலில் கோலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும். கோலிவுட்டில் தற்போது நிலையான இடத்தில் உள்ள வாரிசுகளின் எண்ணிக்கையும், வந்த வேகத்தில் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்ட வாரிசுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் இந்த வித்தியாசத்தைக் கண்டறியலாம். அந்த வித்தியாசத்துக்கு வித்திடுவது - திறமையும் அணுகுமுறையும் மட்டுமே!

ஆரம்பித்ததில் இருந்து இப்போது இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்துவிட்டாலும் விஜய் எப்போதுமே தன்னுடைய இடத்தை தக்கவைக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக இருப்பார். முன்பு போல அல்லாமல் தற்போது ஒரு கதையை கேட்டுவிட்டு அது சரியாக இருக்குமா, ரசிகர்களின் மனநிலை என்ன என்பதை தீவிரமாக ஆராய்ந்தே பின்னரே ஒப்புக் கொள்கிறார்.

ஒரு நடிகனின் வாழ்க்கை கடும் கடினமானது என்பார்கள். அது விஜய்க்கு கச்சிதமாகப் பொருந்தும். திரையில் ஆவேசம் காட்டுபவர் விஜய். திரைக்குப் பின்னால், தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலரால் வரும் சங்கடங்கள், ஒவ்வொரு படத்தின் மூலம் வரும் எதிர்பார்ப்புகள், அவற்றுக்கு இணையான கலாய்ப்புகள் என அனைத்தையுமே விஜய் மிகவும் அமைதியாக எதிர்க்கொள்வதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம்!

courtesy: கா.இசக்கி முத்து, தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

Saturday, June 20, 2015

DECODING THE ILAYATHALAPATHY PHENOMENON!


It’s going to be June 22nd again, a day which is considered to be bigger than a Diwali, Ramzan or a Christmas for a section of audience. This slideshow is for that section and for them alone. It’s our Ilayathalapathy’s birthday. This is just another slideshow which showcases the traits of Vijay, but it still has something different from the usual.



PULI - MINNAL VEGAM
Puli has several traits, one of which is the speed with which it launches itself at its prey; not many can better that. Vijay can be referred as a real tiger with the pace with which he dances and also the ‘thuru thuru’ factor that he carries on screen right from his early film days.










MINSARA KANNA - RASIGARGALIN MANNA
Darling of the masses - Fans go berserk the moment they watch him at the giant screen.  Some of his popular nick names are Ilayathalapathy, Anna and Thalaiva.








ATM - MONEY SPINNING MACHINE
He is a money spinner and has changed the fortune of many producers. If you are a producer and if you want to make a hit movie, just go knock at his door. Yeah it’s not that simple because when you go there, you will find a hundred more people, just like you with a bag full of cash waiting for his call sheet








RASIGAN - ALWAYS A FAN OF GOOD WORK
Vijay has this habit of encouraging good cinema, no matter how small or big the film is. If you make a good film, rest assured to get a call from your most biggest ‘Rasigan’.








KATHTHI - RAZOR SHARP EYES
One of the highlight features of Vijay’s looks is his eyes. They are so magnetic and powerful which leaves millions gawking at his posters for hours.








GHILLI - BORN TO WIN
Yes Yes Yes! He has had a few flops to his credits but that has never let him shy away from marching forward and he hits the bull’s eye more often than he misses.









NANBAN - THE PHOTO SAYS IT ALL
He has a couple or even more on screen rivals but off the field he maintains a very dignified rapport with all of them which marks the trait of a true sportsman.









THULLADHA MANAMUM THULLUM - IVAR PAADUM BODHU
Not just dancing, Thalapathy ku Paattu kooda nallavey varum !







NENJINILAE - EN NENJIL KUDI IRUKUM ENATHU ANBANA RASIGARGALAE
Vijay has great regard for all his fans. He even takes time to meet a huge chunk of his fans in private and takes selfies that too carrying a serene face all the time even if he had to pose for a 600th selfie for that day.









VASEEGARA - A MAGICAL CHARMER INDEED
He is always calm and tranquil but he has still managed to attract millions of hearts with a simple smile.







THALAIVA - FOR THE PEOPLE (FANS)
A leader that people look up too, not just in films but even in reality he does so many welfare actives which go unnoticed many a times.







TAMIZHAN - DA
One of the very few Tamil actors (Born to Tamil parents) to have attained that top spot in Tamil cinema.






JILLA - ALL AREA LAIYUM ANNA GHILLI DA
He has created a winning spree not just in Tamil Nadu, but even in other states or even other countries for that matter.








YOUTH - ENDRENDRUM ILAMAI
People say life begins at 40 but you still look old when you touch 40, but this man doesn’t look like he is aged any bit. Still looks so very fit and agile and his looks haven’t changed much over the years.








NAALAYA THEERPU - ALREADY A SUPERSTAR - WHAT NEXT?

He has already conquered what many couldn’t at such a short span of time. But where does he see himself go from here?




Courtesy: http://behindwoods.com/











விஜய்யின் காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியங்கள்



விஜய்யின் காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியங்கள்

இளையதளபதி விஜய் தற்போது அதிரடி ஆக்சன் படங்களை தொடர்ந்து கொடுத்து வெற்றி பெற்று கொண்டு வந்தாலும், அவர் முதன்முதலாக ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் கோலிவுட்டில் அடையாளம் காணப்பட்டார். விஜய்யின் ஆரம்பகட்ட படங்களை பார்த்தால் இளைஞர்களை கவரும் வகையில் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. விஜய் நடித்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.





பூவே உனக்காக
ரசிகர்களால் மட்டுமே ரசிக்கப்பட்டு வந்த விஜய்யை, அனைத்து தரப்பினர்களும் ரசிக்க காரணமாக இருந்த திரைப்படம் 'பூவே உனக்காக' என்று சொன்னால் அது மிகையாகாது. முதன்முதலாக ஆர்ப்பாட்டம், துள்ளல் இன்றி அமைதியான, அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பை விஜய் பதிவு செய்த படம் என்று இந்த படத்தை கூறலாம். தான் காதலித்த பெண், இன்னொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்ததும், அவர் விரும்பியவருடன் காதலியை சேர்த்து வைத்துவிட்டு கடைசி வரை காதலின் நினைவிலேயே வாழும் அழுத்தமான கேரக்டர் விஜய்க்கு இந்த படத்தில் கிடைத்தது. விஜய்யும் கேரக்டரின் தன்மையை புரிந்து கொண்டு அற்புதமாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி அனைத்து தரப்பினர்களாலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது





லவ் டுடே
முந்தைய படம் போலவே மீண்டும் ஒருமுறை ஆர்ப்பாட்டம் இன்றி விஜய் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய படம் இது. தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலியை தேடி போனதால் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் போன கேரக்டரில் விஜய் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இறுதியில் காதலை விட தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகனாக அவர் எடுக்கும் முடிவு காதலர்களுக்கு சோகத்தை தந்தாலும், இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.




ஒன்ஸ்மோர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் விஜய் நடித்த ஒரே படம். பல வருடங்களாக பிரிந்து வாழும் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி ஜோடியை சேர்த்து வைக்க விஜய் எடுக்கும் முயற்சிகளும், போடும் திட்டங்களும் அனைவரும் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும். விஜய்-சிம்ரன் காதல் கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் அற்புதமாக அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





துள்ளாத மனமும் துள்ளும்
விஜய் நடித்த காதல் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று சொல்லும் அளவிற்கு அழுத்தமான காட்சி அமைப்புகள் கொண்ட திரைப்படம். சிம்ரனை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் விஜய்யை தவறாக நினைக்கும் வகையில் சூழ்நிலை அமைவதும் பின்னர் கிளைமாக்ஸில் விஜய்யின் நல்ல குணங்களை சிம்ரன் புரிந்து கொள்வதும் இந்த படத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று சொல்லும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்தது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.





காதலுக்கு மரியாதை
கோலிவுட் திரையுலகில் காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் என்ற ஒரு லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக இந்த படம் அந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் விஜய் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். பெற்றோர்களுக்காக காதலர்கள் விட்டு கொடுப்பதும், காதலர்களை கிளைமாக்ஸில் பெற்றோர்கள் சேர்த்து வைக்க போராடுவதுமான காட்சிகளை யாரும் மறக்கவே முடியாது. குறிப்பாக கிளைமாக்ஸில் வசனங்கள் அதிகம் இல்லாமல் விஜய், ஷாலினி ,ஸ்ரீவித்யா ஆகியோர் கண்களாலே நடித்திருப்பதும், அதற்கு இசைஞானி போட்ட அற்புதமான பின்னணி இசையும் காலத்தால் அழிக்க முடியாத படமாக இந்த படம் அமைய காரணங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





குஷி
காதலில் ஈகோ இருக்கக்கூடாது என்ற ஒரு கான்செப்ட்டை மட்டும் வைத்து கொண்டு படம் முழுவதையும் ஜாலியாக நகர்த்தியிருப்பார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. விஜய் மற்றும் ஜோதிகாவின் அபாரமான நடிப்பில் உருவான இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





ப்ரெண்ட்ஸ்
நட்பு, காதல் என இரண்டையும் சம அளவில் மதிக்கும் ஒரு கேரக்டரில் விஜய் பேலன்ஸ் செய்து மிகவும் சிறப்பாக நடித்திருந்த படம்தான் இது. நண்பன் சூர்யாவுக்கும் காதலி தேவயானிக்கும் ஏற்படும் பல கருத்துவேறுபாடுகளை சமாளிக்கும் இந்த கேரக்டரை விஜய் தவிர வேறு யாராவது நடிக்க முடிந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.






பிரியமானவளே
இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையே தெரியாமல் அமெரிக்காவில் இருந்து வந்த இளைஞர் கேரக்டரில் விஜய் இந்த படத்தில் நடித்திருப்பார். திருமணத்திற்காக ஒப்பந்தம் போடுவது, மனைவியை ஒப்பந்தம் முடிந்ததும் பிரிய நினைப்பது ஆகியவை முதல் பாதியில் வந்தாலும் பின்னர் கடைசியில் அன்பு, பாசம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளும் வகையில் விஜய்யின் கேரக்டர் சூப்பராக அமைக்கப்பட்டிருக்கும்.





நினைத்தேன் வந்தாய்
தனது கனவு தேவதையான ரம்பாவை விஜய் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் பெறோர்கள் அவருக்கு தேவயானியுடன் நிச்சயம் செய்து விடுவார்கள். பின்னர் தனது கனவில் வந்த் தேவதை தேவயானியின் தங்கை ரம்பாதான் என்பதை அவர் தெரிந்து கொண்டவுடன் நடைபெறும் சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம்தான் 'நினைத்தேன் வந்தாய்





சச்சின்
விஜய் இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். ஒரே கல்லூரியில் படிக்கும் ஜெனிலியாவை விஜய் முதலில் விரட்டி விரட்டி காதலிப்பார். முதலில் விஜய்யின் காதலை ஏற்றுகொள்ள மறுக்கும் ஜெனிலியா, பின்னர் உண்மையாகவே காதல் வயப்பட்டு தனது காதலை விஜய்யிடம் சொல்லும் நேரத்தில்தான் விஜய் ஒரு கோடீஸ்வரர் என்பது ஜெனிலியாவுக்கு தெரியவரும். இப்போது தனது காதலை கூறினால் பணத்திற்காகத்தான் தான் காதலிப்பதாக விஜய் நினைத்துக்கொள்வார் என்று ஜெனிலியா காதலை சொல்லாமல் மறைப்பதும் இறுதியில் என்ன ஆயிற்று என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லப்பட்ட இந்த படமும் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது ஆக்சன் ஹீரோவாக வெற்றி நடை போட்டு வந்தாலும், காலத்தால் அழியாத படங்களை கொடுக்க வேண்டுமானால் அவ்வப்போது அவர் முழுநீள காதல் படங்களிலும் அவர் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் சமீபத்தில் வெளியான 'காவலன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் விருப்பத்தை அவர் அவ்வப்போது நிறைவேற்றி கொண்டிருந்தாலும் தொடர்ந்து இன்னும் நிறைய ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 courtesy: http://www.indiaglitz.com/






























Popular Posts