Saturday, July 30, 2011

YOHAN: ADHYAYAM ONDRU - யோஹன் அத்தியாயம் ஒன்று



யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

 



                                     Make way for another biggie, yes an official announcement has been made on the project for which Gautham Vasudev Menon and Ilayathalapathy Vijay are teaming up. Those who saw few of the leading newspapers would have definitely caught a glimpse of this film�s advertisement.Titled 'Yohan: Adhyayam Ondru', the film will see Vijay essaying protagonist, direction by Gautham Menon and production by the latter's banner, Photon Kathaas. This film is said to be a sci-fi thriller and boasts off a huge budget. The film will cater to Vijay's mass fans with Gautham perfect packaging.

                                                          However, the project will go on floors only in 2012, thanks to prior commitments of both Vijay and Gautham. "Other details related to the project are being worked out. Things will be made official soon", sources say.

                                           AR Rahman is expected to compose music for 'Yohan: Adhyayam Ondru', which will be shot in foreign locales, including Gautham's favourite country, the United States. A top actress may be roped in to play the heroine.Even before the film has gone on floors, a few sources say that the film will be a series and the name of the film is what that seems to have added to this buzz. Vijay is believed to play a secret agent in this film and we can see his super smart self in the film's poster.The film will see an early 2013 release; don't forget to post in your comments of what you think about this hot avatar of our Ilayathalapathy and about your expectations on this Gautham-Vijay venture...




Friday, July 22, 2011

விஜய்யைப் பற்றிய சில தகவல் துளிகள்!





நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில்.

நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த 'செந்தூரப்பாண்டி', விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்!

'காவலன்' வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. 'வேலாயுதம்' ரிலீஸுக்கு வெயிட்டிங். 'நண்பன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

பின்னணிப் பாடகராக 'தேவா' படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் 'சச்சின்' படத்தில்  உள்பட பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ஏனோ இப்போது பாடுவதைத் தவிர்த்து, புதிய பாடகர்களை உற்சாகப்படுத்துகிறார்!

விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய்.அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்!

எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான சி.டி. கலெக்ஷன் உண்டு அவர் வீட்டில்.

நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை!

விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது. ஆனால், இப்போது இரண்டு சிறு நெளி மோதிரங்களை அணியத் தொடங்கியிருக்கிறார்!

ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!

ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் 'வாங்க போங்க'தான்!

வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்!

விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். கொட்டிவாக்கம் வீட்டில் டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்!

சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசாம் அது!

அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது 'அண்ணாமலை' பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்!

நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்!


நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது 'மச்சி'. மற்றவர்களை விஜய் அழைப்பது 'என்னங்கண்ணா!'

கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்!

எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்!

வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு.

அம்மா ஷோபா சந்திரசேகரை இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்!



எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்!

விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு!

மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பா வின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர் கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருகிறார் விஜய்.

ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களில் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்!

சில வருடங்களாக அரசியலில் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார். கடந்த தேர்தலில் இவர் ஆதரித்த அதிமுக வெற்றியடைந்ததில் விஜய்க்கு ரொம்ப சந்தோஷம்.  நேரடி அரசியலில் இறங்குவதில் விஜய்யை விட  விஜய்யின் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.!

Thursday, July 21, 2011

Vijay @ Salem VMI Meet Newspaper Articles


dinamalar

விஜய் கூட்டத்தில் ரசிகர்கள் திடீர் ரகளை:

சேலம் : சேலம் மூன்று ரோடு, ஜவகர் மில் திடலில், நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், நடிகர் விஜய் பேசியதாவது: சென்னையில், நான் அன்னதானம் செய்தாலும் சரி, இலவச நலத்திட்ட உதவிகள் செய்தாலும் சரி, உடனே அதை, சேலம் மாவட்ட ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். அந்த விருப்பத்தை எனது தந்தை மூலமாக உங்களுக்கு தெரியப்படுத்தினேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்த போதிலும் கூட, அ.தி.மு.க.,வின் வெற்றிக்காக பாடுபட்டீர்கள். தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது. எளிதில் வெற்றி கிடைத்து விடாது. என்னை நம்பியிருக்கும் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உள்ளது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், சேலம் மாவட்ட மக்கள் இயக்க தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரசிகர்கள் ரகளை போலீஸ் தடியடி : நடிகர் விஜய் 6.30 மணிக்கு மேடைக்கு வந்தார். விஜயை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் முண்டியத்துக் கொண்டு முன்னேறினர். அப்போது, ரசிகர்கள் சிலருக்குள் மோதல் வெடித்தது. அதில் ஆத்திரம் அடைந்தவர்கள், நாற்காலிகளை தூக்கி வீசியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

விஜய்யை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை! - அனுஷ்கா பேட்டி

விஜய் மிகவும் திறமைசாலி, ஆனால் அவரை இன்னும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

வேட்டைக்காரன், சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து வெளிவர இருக்கும் தெய்வத் திருமகள் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கிறார் அனுஷ்கா.

வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சிறந்த நடிகராக இருப்பதோடு, மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனால் அதையும் மீறி அவர் பணிவோடு இருக்கிறார்.

Vijay’s photo session with Fans!


Vijay Makkal Iyakkam Meeting at Salem


Popular Posts