Wednesday, June 27, 2012

A BIRTHDAY PRESENT FOR ILAYATHALAPATHY VIJAY

This was precisely the moment I was petrified about ever since I had the guts to dream about writing something on Ilayathalapathy Vijay. Would he read it? Will I ever make justice to the over powering emotions and metaphors that conjure in my head that I inherently desire to match with my understanding about this phenomenon known as Vijay? Because, every time the lightning (read understanding) struck, gratitude overwhelmed in my heart. And because gratitude ebbed, fear followed. Neither my cognizance nor my writing skills might ever match up to what he does. But I had to let it out of my system for one reason- the world must know. I must know that I made an effort for the world to know. About him.
Everyone, in most of the places I knew mocked. That means Family, Friends, Chennai, Melbourne, and even Facebook. Some sort me out to jibe, taunt and sneer. You are a Vijay fan? Like I had sinned against cinema or still worse, sanity. Thanks to all that, it ends up in an article. Up until now, you would have noticed, I speak about me and not him. But how could I possibly explain who he is, without stating what he did to me? Now that is what I call an introduction.
Imagine a world in which you will not have fast dance, a charisma that melts people’s hearts, a smile that can at least momentarily remove your sorrow, and someone who makes you reflect at yourself, without asking you to. I would do anything to have an effect like that. Most of us, ask, for things to be done. Ilayathalapathy Vijay’s birthday arrives and people celebrate it. How? By blood donations, by contributing money to orphanages, buying food for the children there, and contributing books for them. It is not asked. It is done. How? Why?  The case point of him being an actor does not stand strongly here because there are other actors too. There is something different about him. Something so unique, yet so ordinary. Something exclusive, yet so universal.
So why does Ilayathalapathy Vijay stand apart? What gap has he filled that others strive hard to reach? To me, Vijay Anna is a simplified Kamal Hassan and more. Not simple. But simplified. I recollect how I feel when I see Heyram, Anbe Sivam and Virumandi. The way my gut wrenches and how tears are involuntary. Leaving aside the directorial labour pain by Kamal Hassan, I am demanding your attention to the artist, the psychologist and human in Vijay. It is the same damn thing. It is the same essence.

 It is a similar work – the work of a genius who understands what the movie character needs, carefully and painstakingly matches it with what the people need, actualizes it with a conviction and says it with a personal voice that carries what he believes in as well. Like a potter who carves his pot with his parental touch, mixing his sweat with the clay and then leaving his finger prints –his personal stroke on it. Very similar to Kamal Hassan in this aspect – sometimes making it hard to differentiate between the actor and the person (with pleasure of course). This you realize once the movie is over. But during the movie, unlike some artists whose personal voice over rides the character, Vijay Anna seldom does it. For eg, Kutty of Thulladha Manamum Thullum, Shiva of Youth, Bhupathy of Vaseegara, Muthappa of Sivakasi and Sivagiri of Thirupaachi, all carried an authentic, original sense of the character but was never over ridden by Vijay himself. A perfect balance of the character and the person was so evident that it made me shed tears of joy. I am sure a character like Shiva (Youth) required a very high level of personal maturity to handle its nature - a letdown groom who brings back the same girl who let him down, from tragedy to life -by his characteristically divine, humble and matured charm that I can’t get enough of.
Where others have failed, Vijay Anna has won. The supreme satisfaction of an artist from the people who watch him/her is to follow his/her message. And in Vijay Anna’s case alone, for now, millions do it without being told.  A message of love and brotherhood. A message that Bob Marley conveyed, a message that Kamal Hassan strives to every time, and many others. In his case, things flow. The invisible bond is extremely strong, that people who are inspired do not need the noise from a mike. Largely because he models what he believes in rather than preach. If the fact that him not using English like a Westerner, him not dressing up like the way you want, him not presenting the world market on your face, are the reasons you cannot stand him, it is absolutely fine.

But my request is do not claim to completely understand that acting like music knows no boundaries. Because, I took an Australian lady with me to watch Velayudham. She knew nothing about Vijay nor does she know Tamil. But she screamed, clapped and cried just like me with some kind of madness I thought I only possessed more when compared to her. Emotions, love, anger, hope, triumph - are all universal. And thus Vijay too. Bangladeshi, Iranian, Pakisthani and Australian – his fans. Remove what you already think the ‘non-cool’villager and the ‘non-cool’ city dweller is. Watch his movies with an open mind. Then you will see Tamilness reflecting on him and universalism radiating out from him- In the name of  appreciation of art in its most humble and proud form, from Mongolia to India.
And this work of 6 hours is my birthday present. Happy birthday Vijayna...

Lavanya Raj
lavanyaraj@monash.edu

Saturday, June 23, 2012

Tamil star Vijay turns 38 today

Tamil superstar "Ilayathalapathy" Vijay is 38 today. The actor and singer began his film career as a child artiste in films produced by his father S A Chandrasekhar and has starred in many hits likePoove Unakkaga, Kaavalan, Sivakasi and Nanban.

The actor, who made a special appearance in the recent Bollywood movie directed by Prabhu DevaRowdy Rathore, has been conferred with many awards and honours including two Tamil Nadu State Film Awards. Known for his philanthropic activities, Vijay has also received an honorary doctorate from MGR University for his philanthropic works. He was also the brand ambassador for the IPL team, Chennai Super Kings.

As part of his birthday celebrations, the actor will reportedly present gold rings to children in various government hospitals in Tamil Nadu who have been born on this day. Apart from this, he will be part of many welfare and social activities.

Many South actors wished Vijay on his birthday on Twitter. "Ilayathalapathy Vijay celebrates his 38th birthday today! Tamil cinema's one of the romantic hit pair is Vijay," tweeted Asin and also posted a picture.

 "Happy b'day to my favorite actor dancer Thalabathi Vijay," posted actress and dancer Gayathri Raguraman.

We wish Ilayathalapathy Vijay a very happy birthday.

Vijay blesses newborns with gold rings

Vijay started off his birthday celebration by doing charity in association with his fans club earlier today. The Velayudham star, who is turning 38 today (June 22), visited the government hospital in Egmore, where the actor was born, and gifted gold rings to the newborns.

Around 11 am, Vijay was welcomed to the government hospital and the place was over crowded by his excited fans, who were present to get a glimpse of the actor and the atmosphere became vibrant with his entry. Amidst tight security, he came in and blessed the babies and presented the gold rings. It has become a habit for the Nanban star to gift gold ornaments on his birthday for the babies born in the hospital.

 Vijay will be reportedly visiting the Child Jesus church at Chinmaya Nagar and will be distributing sarees, dhotis and other gift articles for the needy. On the other end, the actor's fans association is conducting voluntary blood donation camps at various place in many parts of Tamil Nadu.

His father SA Chandrasekhar will be inaugurating a camp organised at Neelagarai, on the outskirts of Chennai, and they have also planned many welfare programmes.

Vijay Birthday Celebration - newspaper articles


Vijay Birthday Celebrations 2012 1st on net exclusive video

Friday, June 22, 2012

vijay special


விஜயின் வாழ்க்கை கில்லி பட திரைக்கதை போல அத்தனை வேகமானதாகத்தான் பலராலும் நம்பப்படுகிறது. சொல்லப்படுகிறது. முதல் பத்தியில் சொன்னதைப் போல அது இலகுவானதா என்றால் நிச்சயம் இல்லை. விஜய் முதலில் நடிக்க வேண்டும் என்ற போது அவர் வீட்டிலே எதிர்ப்புதான் பதிலாய் வந்தது. தன் நண்பர்களிடத்தில் சொல்லியிருந்தாலும் கிண்டலும் கேலியும்தான் செய்திருப்பார்கள். அப்போது இருந்த விஜயின் தோற்றம் அப்படி. மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைவதற்கான ட்ரேட் மார்க் தகுதிகளாக வாரிசுகள் உருவாக்கி வைத்திருக்கும் குதிரையேற்றம், சண்டை பயிற்சி, நடனம் என எந்த முன்னேற்பாடுகளும் அவர் செய்யவில்லை. சினிமாவில் நுழைய அவர் செய்த அதிகபட்ச முயற்சியே வீட்டில் சொல்லாமல் உதயம் தியேட்டருக்கு சென்று அண்ணாமலை படம் பார்த்ததுதான். அதற்குள் அவரைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கே இழுத்து செல்லப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை பெரிதாய் எதுவும் முயற்சி செய்யவில்லையே என்று விஜயை சீண்டும் எஸ்.எம்.எஸ்கள் வரலாம். ஆனால் உண்மை அதுதானா?

விஜயின் முதல் படம் தோல்வி. இரண்டாவது பட படப்பிடிப்பில் ஒருவர் சொன்னாராம்” இவனையெல்லாம் யாருய்யா நடிக்க கூப்பிட்டது? சண்டையும் வரல டான்ஸூம் வரல” . உண்மைதான்.அப்போது விஜய்க்கு அந்த இரண்டுமே சரியாக வரவில்லை. சொல்லப் போனால் அப்போது இருந்த விஜய்க்கு எதுவுமே சரியா வரவில்லை. அப்போதுதான் முதலில் நடன வகுப்புக்கும், சண்டை பயிற்சிக்கும் சென்றார். இன்று விஜயின் ப்ளஸ்களில் முக்கியமானவையாக இருப்பது அவை இரண்டும்தான். எந்த இரண்டு விஷயங்களுக்கு அவர் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படாரோ, அதில்தான் அவர் இன்று இணையற்ற நாயகனாக விளங்குகிறார். மீனா, ரோஜா போன்று அவருடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கிய பலர் அவருடன் ஒரு பாடலில் மட்டும் ஆடியது எல்லாம் பழைய கதை. இந்திய அளவில் சிறந்த டேன்சர் என்று ஷில்பா ஷெட்டியிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன மூவரில் ஒருவர்… விஜய். இதற்கும் அவர் இயக்குனர் மகனாக பிறந்ததுதான் காரணம் என்போர். ப்ளீஸ். இது உங்களுக்கு அல்ல.

நடிக்க வந்தபின் நடிக்காமல் நன்றாக ஆடினார், பாடினார், அடித்தார் என்பது சப்பைக்கட்டாக தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. விஜயின் தோற்றத்திற்கு பலவித கெட் அப்கள் அவருக்கு தோதாக இருக்கவில்லை. எப்போதாவது செய்த கண்ணுக்குள் நிலவு,சச்சின் போன்ற முயற்சிகளும் தோல்வியே. அதனால் தனக்கு ஏற்ற கதைகளையே தேர்வு செய்யத் தொடங்கினார். விஜயின் 50 படங்களை 5 வகையாக பிரிக்கலாம். தனக்கென ஒரு பாதை இல்லாது நடித்த ஆரம்பகால படங்கள். அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார்.அதை விட்டுவிடலாம். அவரது 9வது படம்.பூவே உனக்காகஇரண்டாம் வகை. குடும்ப செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.

அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல், மின்சார கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள். இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்கு போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள். தனது பாதையை சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி. மூன்றாம் வகை. உடைகள், நடனம், பாடி லேங்ஜுவேஜ் என சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என மேட்டுக்குடி படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பான ஓப்பனிங் கண்ட அந்த திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா”. விஜய் பார்க்க சுமார் என்றவர்கள் கூட அவரின் உடையலங்காரம் குறித்து சிலாகித்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். இந்தியாவின் பல முன்னணி காஸ்ட்யும் டிசைனர் தமிழகத்தின் பெஸ்ட் டிரெசிங் சென்ஸ் உடையவர் விஜய்தான் என்றும் சொன்னார்கள். குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி என பட்டயைக் கிளப்பினார்.

மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாக தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன், வசீகரா, புதிய கீதை என தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்பு பின்னர் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. நாயகியின் தங்கை காலில் விஜய் விழுவது போல இருந்த ஒரு காட்சி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை என்று எழுதியது ஒரு வாரப்பத்திரிக்கை. அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் அவதாரமெடுத்து நிற்க, கூடவே நந்தா, மெளனம் பேசியது என பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க என்ற சிக்சரோட காத்திருந்தார். 2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது விஜய்க்கு. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலிஸாக நடித்த ஆஞ்சனேயா, வல்லரசில் விஜய்காந்தையே கலக்கலாக காட்டிய மகாராஜன் படம் ஒரு பக்கம். தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா. இவர்கள் ஒரு பக்கம். தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குனரோட ஒரு பக்கம். தமிழ் சினிமாவின் அன்றைய டாப் ஹீரோக்கள் நேரிடையாக மோதிய களம். திருமலை.. நான்காம் வகை.

படம் வந்தபோது நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரில் பார்த்திருந்தாலும் நினைவிருக்கும். விஜயின் மாஸ் முன்னால் எதுவும் எடுபடாமல் போனது. பிதாமகன் தேசிய விருது பெற்றாலும் மக்களின் அமோக ஆதரவு திருமலைக்கே. தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்கு தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் தளபதி. திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்

“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”

விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.

“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”

சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில் போய்க் கொண்டிருந்தார் தளபதி. இங்க விழுந்து ஆகணுமே என்று எதிர்பார்த்தது போல் ஆனது. குருவி, வில்லு என தனக்கு மெகாஹிட் தந்த இயக்குனர்களை நம்பி தோல்வியைத் தந்தார். வேட்டைக்காரன் சற்றே பிக்கப் ஆனாலும் சுறா வந்து சுத்தமாக சூறையாடியது. இதோ மீண்டும் ஒரு மந்த நிலையில் உள்ளார் தளபதி. மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

அடுத்து ஹீரோயிச பில்டப் இல்லாத பாடிகார்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப படங்களுக்கு பெயர் போன ஜெயம் ராஜாவுடன் கைகோர்க்கவிருக்கிறார். 3 இடியட்ஸில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இயக்குனர் யார் என்ற யூகப்போர்தான் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் தனது புதுப்பாதை மூலம் அவர் வெற்றிக்கொடி நாட்டப்போவது நிச்சயம். இந்த தோல்விகள் எல்லாம் விஜய்க்கு புதிதல்ல. படத்தின் முடிவு என்னவென்றாலும் ரசிகர்கள் எண்ணிக்கை அவருக்கு என்றுமே குறைந்ததில்லை. பெரும் வெற்றி எனப்படும் சிங்கத்தின் முதல் வார சென்னை வசூல் 75 லட்சம். படுதோல்வி எனப்படும் சுறாவின் வசூல் 73 லட்சம். விஜய் டிவி தமிழகமெங்கும் நடத்திய அக்ருத்துக் கணிப்பில் அபார முன்னிலையில் Most Popular hero ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுதான் விஜய்.

இந்த வருடம் சிறப்பாய் மலர வாழ்த்துகிறோம் விஜய்

விகடன் மேடையில் விஜய்!

''எவ்வளவு கடினமான நடன அசைவுகளாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அனாயாசமாக ஆடிவிடுகிறீர்களே, அதன் ரகசியம் என்ன விஜய்?''

''இதில் ரகசியம் எதுவும் இல்லை. உங்கள் வெளிப்படையான கைத்தட்டல்தான் காரணம்!''


 ''உங்க படம் ரிலீஸாகும் சமயங்களில் கண்டபடி உலவும் எஸ்.எம்.எஸ்-கள் உங்கள் மொபைலை ரீச் செய்திருக்கிறதா? உங்க ரியாக்ஷன் என்ன?''

விஷமம் பரப்புறது சிலருக்குச் சந்தோஷமா இருக்கும்போல! அதை நான்...

S - சிந்திப்பேன்.

M - மௌனமாகிடுவேன்.

S - சிரிப்பேன்.



 ''உங்களால் மறக்க முடியாத ரசிகர்..?''

''காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கார்த்திக்னு ஒருத்தர். பெங்களூர்ல இருந்து புறப்பட்டு, என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். நேர்ல என்னைப் பார்த்ததும் முகத்துல அப்படி ஒரு பரவசம். 'இவ்வளவு தூரம் எப்படி கஷ்டப்பட்டு வந்தீங்க?’ன்னு நான் கேட்க, சைகையிலயே ஆர்வமா ஏதேதோ கதை கதையா சொன்னார். எனக்குக் கண் கலங்கிருச்சு. நான் அவருக்கு ஆறுதல் சொல்லப் போக, கடைசியில் அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்துத் தேத்தினார். ரொம்ப வெகுளி. அந்த மாதிரி ஒரு மனசு இருந்தா, உடலின் எந்த ஊனத்தையும் சமாளிச் சுடலாம்!''































பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!



ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்...

* முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த 'செந்தூரப்பாண்டி', விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்!

* பின்னணிப் பாடகராக 'தேவா' படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் 'சச்சின்' வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ  பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது 'துப்பாக்கி' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

* விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்குவரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

* திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

* ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்!

* எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு!

* நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை!

* விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.

* ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!

* ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் 'வாங்க போங்க'தான்!

* வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்! 

* தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்!

* விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். கொட்டிவாக்கம் வீட்டில் இப்போது விளையாடுவது டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்!

* சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்!

* அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது 'அண்ணாமலை' பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்!

* நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்!

* நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது 'மச்சி'. மற்றவர்களை விஜய் அழைப்பது 'என்னங்கண்ணா!'

* கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்!

* எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்!

* வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. 

* அம்மா ஷோபா சந்திரசேகர் இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்!

* மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா!

* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.

* விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த  'தமிழன்' படத்தில் தான். 

* ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்!

* வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது கொட்டிவாக்கம் வீட்டிற்கு செல்கிறார்.

* ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.

T.H.U.P.P.A.K.K.I Exclusive by A.R.Murugadoss


Vijay @ Egmore Hospital 22 June 2012


New Thupakki Official Poster


Vijay Birthday Celebrations


Vijay Birthday Special New Picture


Vijay Birthday news

 
 
தனது பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம் அளிக்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜய் செல்கிறார். அங்கு நாளை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.

இங்குதான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நீலாங்கரையில் ரசிகர்களின் ரத்தான முகாம் நடக்கிறது. இலவச மருத்துவ முகாமும் நடக்கிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கி வைக்கிறார்.

வேளச்சேரி பகுதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருவான்மியூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

புரசைவாக்கம், கோடம்பாக்கம் பகுதி ரசிகர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்கள்.

சின்மயாநகர் குழந்தை ஏசு கோவிலில் முதியோருக்கு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

கொருக்குப்பேட்டை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் எல்.குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Thalapathy Anthem-Birthday Gift from Kerala Vijay

Happy birth day wishes to vijay


Popular Posts