Friday, October 24, 2014

கத்தியை பாராட்டும் செலிபிரட்டிகள்






நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கத்திக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தனுஷ் கத்தியை பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது கத்தி படத்தை மேலும் சில சினிமா பிரபலங்கள் எப்படி பாராட்டியுள்ளனர் என்பதை பார்ப்போம்.

தயாநிதி அழகிரி: 'கத்தி' திரைப்படம் ஒரு மாஸ் எண்டர்டெயிட்மெண்ட் கதை. கண்டிப்பாக விஜய்யை தவிர வேறு யாராலும் இவ்வளவு அற்புதமான நடிப்பை கொடுத்திருக்க முடியாது.

சிபிராஜ்: சமூக கருத்துக்களுடன் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் வெளிவந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த குறையை கத்தி தீர்த்துவிட்டது. 

சாந்தனு பாக்யராஜ்: ஒரு நல்ல சமுக கருத்தை ஒரு மாஸ் நடிகர் கூறினால்தான் அந்த கருத்து அனைவரிடமும் சென்றடையும். அந்த வகையில் கத்தி அனைவரின் இதயங்களையும் தொட்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் சூப்பர் நடிப்பு அபாராம்.

தனஞ்செயன்: அருமையான திரைக்கதை, அற்புதமான விஜய்யின் இரட்டை வேடம், ஒரு நல்ல கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட், அனைவரையும் கவரும் வசனங்கள் என அனைத்திலும் பெர்பக்ட் உள்ள திரைப்படம் கத்தி. முருகதாஸ் மற்றும் விஜய்க்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரேயா ரெட்டி: கத்தி படத்தில் விஜய் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நான் மிகவும் விரும்பி ரசித்த திரைப்படங்களில் ஒன்று

ராதிகா சரத்குமார்: ஸ்ட்ராங்கான மெசேஜ் உடன் வெளிவந்துள்ள மாஸ் திரைப்படம். முருகதாஸ், விஜய்க்கு வாழ்த்துக்கள். ஐ லவ் கத்தி.

No comments:

Post a Comment

Popular Posts