Thursday, October 23, 2014

விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் பலி!

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது  திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர்  பலியானார்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,   வடக்கஞ்சேரியில் உள்ள  ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின்   கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார்.

அவரின் பெயர்   உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர்.  விஜய்  ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Popular Posts