Tuesday, September 30, 2014

new vijay pic


Monday, August 4, 2014

Don’t insult ‘AMMA’ - Actor Vijay’s speech


என் தாயை தப்பாக பேசின மாதிரி நினைக்கிறேன்: விஜய் சொல்கிறார்!

சென்னை: இலங்கை அரசு ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்டதை, என் தாயை தப்பாக பேசின மாதிரி நினைக்கிறேன் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசுகையில், ''ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம் மீனவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக நம்முடைய தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள், எவ்வளவோ ஸ்டெப்ஸ் எடுத்துக்கிட்டு இருக்காங்க.

அதை ஸ்ரீலங்கா கவர்மெண்ட் அவர்களுடைய டிஃபன்ஸ் ( பாதுகாப்புத் துறை) வெப்சைட்டில் கேலி செய்வது போன்ற ஒரு கமெண்ட் பண்ணியது உண்மையிலேயே என் தாயை தப்பாக பேசின மாதிரி நாங்க நினைக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழருக்குமே ரொம்ப, ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம். அதை கடுமையாக கண்டிக்கிறோம்'' என்றார்.

நடிகர் விஜய், சூர்யா உள்பட திரையுலகினர் ஆர்ப்பாட்டம்


Popular Posts