Pages

Friday, June 22, 2012

விகடன் மேடையில் விஜய்!

''எவ்வளவு கடினமான நடன அசைவுகளாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அனாயாசமாக ஆடிவிடுகிறீர்களே, அதன் ரகசியம் என்ன விஜய்?''

''இதில் ரகசியம் எதுவும் இல்லை. உங்கள் வெளிப்படையான கைத்தட்டல்தான் காரணம்!''


 ''உங்க படம் ரிலீஸாகும் சமயங்களில் கண்டபடி உலவும் எஸ்.எம்.எஸ்-கள் உங்கள் மொபைலை ரீச் செய்திருக்கிறதா? உங்க ரியாக்ஷன் என்ன?''

விஷமம் பரப்புறது சிலருக்குச் சந்தோஷமா இருக்கும்போல! அதை நான்...

S - சிந்திப்பேன்.

M - மௌனமாகிடுவேன்.

S - சிரிப்பேன்.



 ''உங்களால் மறக்க முடியாத ரசிகர்..?''

''காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கார்த்திக்னு ஒருத்தர். பெங்களூர்ல இருந்து புறப்பட்டு, என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். நேர்ல என்னைப் பார்த்ததும் முகத்துல அப்படி ஒரு பரவசம். 'இவ்வளவு தூரம் எப்படி கஷ்டப்பட்டு வந்தீங்க?’ன்னு நான் கேட்க, சைகையிலயே ஆர்வமா ஏதேதோ கதை கதையா சொன்னார். எனக்குக் கண் கலங்கிருச்சு. நான் அவருக்கு ஆறுதல் சொல்லப் போக, கடைசியில் அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்துத் தேத்தினார். ரொம்ப வெகுளி. அந்த மாதிரி ஒரு மனசு இருந்தா, உடலின் எந்த ஊனத்தையும் சமாளிச் சுடலாம்!''































No comments:

Post a Comment