Pages

Monday, August 24, 2009

புதுச்சேரி மாணவ - மாணவிகள் கேட்ட கேள்விகள் - விஜயின் பதில்கள்




புதுச்சேரி மாணவ - மாணவிகள் கேட்ட கேள்விகள்
நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன் என்ற நடிகர் விஜய், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார், விஜய்.

அப்போது, ரசிகர்களும் மாணவ - மாணவிகளும் கேட்ட கேள்விகளுக்கு, விஜய் பதில் அளித்துப் பேசினார். அதன் சாரம் இதோ...

உங்கள் குழந்தைகள் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதி கொடுப்பீர்களா?

"தற்போது அவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரன் படத்தில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் ஆடி இருக்கிறான்."

நடிகர் எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் மாறுபட்ட வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். உங்களது படத்தில் நீங்கள் ஒரே மாதிரியாக நடித்து வருகிறீர்கள். எப்போது வித்தியாசமாக நடிப்பீர்கள்?

நீங்கள் கூறிய அனைவரும் வயதான கேரக்டரில் தான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்.

இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல் கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-ல் வல்லரசாக மாறிவிடும்.

உங்களது 50-வது படம் எப்படி இருக்கும்?

'திருப்பாச்சி', 'சிவகாசி', 'கில்லி', 'போக்கிரி' படங்களை விட விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'வேட்டைக்காரன்' படம் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் அமையும்.

நீங்கள் ஆரம்பித்துள்ள மக்கள் இயக்கம், அரசியலுக்கு வர அடிப்படையாக இருக்குமா?

நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு இருக்கிறது. தற்போது எனக்கு வயது போதாது. இது அதற்கான தருணமும் கிடையாது. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும். அரசியல் மிகப்பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன்," என்றார் விஜய்.

No comments:

Post a Comment