Wednesday, June 22, 2016

HBDDarlingofMassVIJAY‬




Thursday, June 9, 2016

வித்யா... விஜய்யின் பேரிழப்பு!

'விஜய் சின்ன வயசுல ரொம்ப துறுதுறு, அதுவும்  குழந்தையாக இருக்கும்போது  நானும், ஷோபாவும் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் அசந்துட்டா  அவ்வளவுதான் எதையாவது தூக்கிப் போட்டு உடைச்சிடுவார். நல்லா ஞாபகம் இருக்கு, அப்போ இளையராஜா இசையில ஷோபா பாட்டு பாடுவாங்க. விஜய்க்கு ஒன்றரை வயசு. அதனால அவரை அழாம பார்த்துக்கிடுற‌ வேலை எனக்கு. 

திருவாரூர்ல இளையராஜா இசைக்கச்சேரி. நான், ஷோபா, விஜய் எல்லோரும் மியூசிக் குழுவோடு டிரெய்ன்ல‌ கிளம்பினோம். திருவாரூர் லாட்ஜ்ல மாடியில்  இருக்கற அறையில் தங்கினோம். கச்சேரிக்குக் கிளம்பற பரபரப்புல இருந்தோம். அப்போ திடீர்னு ஒரு சத்தம். எல்லோரும் பதறி என்னனு  பார்த்தா,  தவழ்ந்துட்டு இருந்த விஜய் மாடிப் படிக்கட்டில் ஸ்லிப் ஆகி உருண்டுட்டு இருக்கார். எங்களுக்கு அதிர்ச்சில மூச்சே நின்னுடும் போல இருந்துச்சு. ஓடிப் போய் குழந்தையைத் தூக்கிப் பார்த்தா முகமெல்லாம் அடி. உதடெல்லாம் வீங்கி இருந்துச்சு. நான் பதட்டத்துல இருக்கேன். ஷோபா ஒரே அழுகை, இசைக்குழுவுல இருந்தவங்களும் பயங்கர அப்செட்.
சூழ்நிலையை புரிஞ்சுகிட்ட நான் '' எல்லாரும் கச்சேரிக்கு  போங்க. நான் பார்த்துக்கறேன்"னு தைரியம் சொல்லி அனுப்பி வைச்சேன். உடனே விஜய்யை தூக்கிட்டு திருவாரூரில் இருக்கிற‌ ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு  போனேன். விஜய்க்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தார். 'ஊசி போடணும்"னு டாக்டர் சொல்ல... அவ்வளவுதான் விஜய் அழுகை அதிகமாயிடுச்சு. அன்னிக்கு  திருவாரூரில் ரயில் ஏறியபோது ஆரம்பிச்ச அழுகை சென்னை வரைக்கும் நிக்கவே இல்ல. விஜய்க்கு ஊசியை பார்த்தாலே பயங்கர பயம். இப்போ சண்டைக் காட்சியில ஆக்‌ஷன் காட்டி எதிரிகளை பந்தாடுகிற விஜய்க்கு உடம்பு சரியில்லேன்னு ஊசிபோட வந்தா இப்போகூட எஸ்கேப் ஆயிடுவார். 

சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளியில்தான் விஜய் படித்தார். 'quietly boy'  இதான் ஸ்கூலில் விஜய்யின் நிக்நேம். அந்தளவுக்கு பையன் அமைதி. சத்தம் போட்டு பேசமாட்டார். டீச்சரிடம் ஏதாவது கேட்கணும்னா கையைக்கட்டி பவ்யமா பக்கத்துல போய், சத்தமே கேட்காமல் பேசுவார். விஜய்க்கு காமெடி அவ்வளவா வராது. ஆனா, நண்பர்களோடு இருக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் சொல்லும் காமெடியைக் கேட்டு சத்தம் போட்டு ரசிப்பார். அவரது சிரிப்புச் சத்தம் மட்டும் அறையில் இருந்து கேட்கும்.
அவருக்கு தங்கச்சி வித்யாதான் உலகம். அவளோட தினம் ஒரு வெளையாட்டு வெளையாடுவார். ஒரு கூடையில்  வித்யாவை வைச்சுட்டு தலைக்குமேல் தூக்கிட்டு தலையைச்சுத்தி விளையாடுவார்.  இது ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல... பல நாள் தொடர்கதையா நடந்து வந்துச்சு. ஒருநாள் தலையைச் சுத்தும்போது கைதவறி வித்யா தலை குப்புற விழுந்து விட்டாள் அவ்வளவுதான் 'அம்மா...’னு விஜய் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்ல இருந்தவங்கள்லாம் ஓடிவந்துட்டாங்க.
பயந்துட்டே வித்யாவை தூக்கினோம். ஆனா, ஆச்சர்யம் அவ உடம்புல ஒரு சின்ன கீறல்கூட இல்லை.  இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கும்.  வீட்டுக்குவந்த எல்லோரும் 'வித்யாவுக்கு ஆயுசு கெட்டி’னு நெகிழ்ந்து வாழ்த்திட்டுப் போனாங்க. ஆனா,  அந்த வாழ்த்து கொஞ்ச நாள் கூட நிலைக்கல. 

வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம 'அப்பா...'னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு. எங்க குடும்பத்துல ஈடு செய்ய முடியாத இழப்பு... வித்யா!" கண்களும் குரலும் ஒருசேர கலங்குகிறது சந்திரசேகருக்கு!

EXCLUSIVE: UNSEEN THERI CANDID CAPTURES


Popular Posts