Friday, August 20, 2010

விஜய்ப்பற்றிய சில செய்திகள்

1) ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!

விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் [^] படங்களைத் தயாரித்தவர்.

ஆனால்.... அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் [^] தெரிவித்தார்.

இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் [^] விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.

சில தினங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா கதையைச் சொன்னாராம். கில்லி மாதிரி விறுவிறுவென திரைக்கதை இருக்க வேண்டும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விக்ரம், சாலிகிராமத்தில் உள்ள ரத்னம் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்க்ரிட்டை பக்காவாக உருவாக்கி வருகிறாராம்.

த்ரீ இடியட்ஸ் ரீமேக் பற்றி தெளிவான ஒரு அறிவிப்பு வந்ததும், இந்தப் படத்தை அறிவித்துவிடலாம் என்று ரத்னத்துக்கு வாக்களித்துள்ளாராம் விஜய்!

2) NO” for Superstar & “YES” for Illaiya Thalapathi – Sathya Raj

In Shankar’s direction film “Shivaji”, Sathya Raj was asked to act in villain role, but he refused that chance and questioned that, If I act as villan in rajini film, Will Rajini act as villan in my film ? ” and this issue was spoken in kollywood by everybody at that time. Now again he has got the same chance of acting as villan in Shankar’s “3-Idiots” film. In “3-Idiots” film Vijay is acting as hero. To act with Illaiya Thalapathi Vijay, Sathya Raj has expressed his acceptance as double ok it seems says the news.

3) ரசிகர்களை மதித்து நடக்கும் விஜய்.

பெரும்பாலான நடிகர்கள் தாங்கள் சினிமாவுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில்தான் ரசிகர்களை சந்திப்ப துண்டு. தான் ஒரு லெவலுக்கு வளர்ந்து விட்டபிறகு அவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் விஜய் இதில் புதுமையானவராக இருக்கிறார். இப்போதும் மாதத்தில் ஒருநாள் தன்னை பார்க்க வரும் ரசிகர்களை சந்திக்கிறார்.

முக்கியமாக, சமீபத்தில் தனது வேலாயுதம் படத்தின் துவக்க விழா நடைபெற்றபோது கூட, விழாவுக்கு பிரபலங்கள் யாரும் வேண்டாம். எனக்கு சீப் கெஸ்ட்டே எனது ரசிகர்கள்தான் என்று சொல்லி அவர்கள் முன்னிலையிலேயே விழாவை நடத்துமாறு படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு உற்சாகத்தில் செயல்படுகிறது விஜய்யின் ரசிகர் மன்றங்கள்.

4) விஜய் எனது இனிய நண்பர்--நடிகை அசின்

நடிகர் விஜய் எனது இனிய நண்பர். பழகுவதற்கு இனிமையானவர் என்று
நடிகை அசின் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் நான் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
விஜய் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன். விஜய் பழக இனிமையானவர். நிறைய ஜோக் சொல்லுவார். படப்பிடிப்பில் நட்பு ரீதியான பழகிக்கொள்கிறோம். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும்.
சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம் என்றார்.

5) வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!

தமிழ்த் திரையுலகில், வருடத்திற்கு அதிகமான படங்கள் தரக்கூடிய நடிகர் என்றால் அது விஜய்தான். அந்தப் பேரினை காப்பாற்றும் வகையில், இந்த ஆண்டிலும் விஜய்க்கு வரிசையாக படங்கள் வந்து குவிகின்றன.
விஜய் நடிப்பில் இதுவரை வந்த 5படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டன.அது மட்டும் இல்லாது படத்துக்கு படம் தன் சம்பள பணத்தை ஏகத்துக்கும் ஏற்றிக்கொண்டே போகிறார். என்றாலும், விஜய்க்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டாபோட்டி போடுகின்றனர்.

இதற்கு என்னக் காரணம் எனக் கேட்டால்...

மற்ற நடிகர்களைவிட விஜய் மட்டும் தான் உடனுக்குடன் படங்களை முடித்துக் கொடுக்கிறார். எத்தனை படங்கள் கைவசம் இருந்தாலும், எல்லாப் படங்களுக்கான கால்ஷீட் தேதிகளை சரியாக முறைப்படுத்தி தருகிறார். விஜய்யால் எந்தப் படத்திற்கும் தடங்கலே வந்ததில்லை என்று விளக்கம் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இப்படியாக... நல்லப்பிள்ளையான விஜய்க்கு அடுத்து வரும் படங்கள் ஹிட்டாக அமையும் என்று திரைவட்டாரப் பேச்சுக்கள் அடிபடுதுங்க...

விஜய்யின் ‘‘வேலாயுதம்” (தெலுங்கு-ஆசாத்) படத்தை இயக்கிவரும் ராஜாவும் இதையே சொல்கிறார். “வேலாயுதம்” படம் இதுவரை விஜய்க்கு வந்தப் படங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இதில் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் இல்லை. இந்தப் படத்தில் புதுமாதிரியான விஜய்யை ரசிகர்கள் பார்க்கலாம். என்று உறுதிச்சான்று அளித்திருக்கிறார் ராஜா.

இயக்குனர் சித்திக்கும், “காவல் காதல்” ( மலையாளம்-பாடிகாட்) படம் விஜய்க்கு இந்த ஆண்டின் சிறந்தப் படமாக அமையும் என்கிறார்

வேலாயுதம்’, ‘காவல் காதல்’ படங்களை அடுத்து விஜய், லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் சிம்பு நடிக்க இருந்தது. தற்போது விஜய்க்கு மாறியுள்ளது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாம்.

அடுத்ததாக ‘யாவரும் நலம்’ பட இயக்குனர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் “24” என்னும் படம். இந்தப் படத்தின் கதையினை கேட்டவுடன் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துப்போனதால் இதில் விஜய் நடிக்கிறார்.
இந்த “24” படமும் கூட, விக்ரம் நடிக்க இருந்ததாம். விக்ரம் தற்போது பூபதிபாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால், விஜய்யின் கைவசமாகியுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னத்தின் “ஸ்ரீ சூர்யா மூவிஸ்” பட நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் குஷி, கில்லி படங்களை சூர்யா மூவிஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் “24” படமும் அமையும் என்று கூறப்படுது.

இதைத் தொடர்ந்து சீமானின் இயக்கத்தில் “கோபம்” என விஜய் படங்களின் லிஸ்ட் நீள்கிறது.

மேலும், முக்கியமான விஷயம், “3 இடியட்ஸ்” படத்தை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்யப்போவது உறுதியாகி உள்ளதாம். ஜெமினி ஃபில்ம் சர்க்யூட் இதை தயாரிக்கிறதாம். அதில் விஜய்யும், சிம்புவும் நடிப்பார்கள் என்றும் தெரிகிறது.
இப்படியாக... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிக மணிகளுக்குகாக தொடர்ந்து ஹிட் படங்களில்(!?) நடிக்க இருக்கிறார் விஜய்... எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...

காவலன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்






விஜய் கொடுக்கும் விசேஷ தோசையும் சூப்பர் காப்பியும் குறும் தொகுப்பு

Vijay in Josalukkas AD

விஜயின் காவலன் தீபாவளிக்கு வருவான் - குமுதம்



Popular Posts